திருப்பூர், டிச. 23 - பி.ஏ.பி. திட்டத்திற்கு நிலம் வழங்கி யவர்களுக்கு காலக்கெடு நிர்ணயித்து இழப்பீடு தருமாறு தமிழ்நாடு விவ சாயம் சங்கம் வலியுறுத்தி உள்ளது. திருப்பூர் சார் ஆட்சியர் தலைமை யில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருப்பூர் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தமிழ் நாடு விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் கலந்து கொண்டு எழுப்பிய கோரிக்கைகள் வருமாறு: பி.ஏ.பி. திட்டத்திற்கு நிலம் அளித்த பல்லடம், திருப்பூர் தெற்கு தாலுகா விவசாயிகளுக்கு நிலம் எடுப்பு செய்து 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் முழுமையான இழப்பீடு வழங்கப்பட வில்லை. இதனால் சம்பந்தப்பட்ட விவ சாயிகள் குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தனித் தனியாக பல்வேறு அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்த பின்பும், உரிய நடவடிக்கை மேற்கொண்டு இழப்பீடு வழங்காததால் விவசாயிகள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
ஆகவே, ஒரு சிறப்பு குழுவை வரு வாய்த்துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளை இணைத்து அமைத்து ஒரு காலக்கெடுவுடன் கூடிய நடவடிக்கை எடுத்து விரைவாக இழப்பீடு வழங்க வேண்டும். ஊத்துக்குளி வட்டம், வடுக பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு புல எண் களுக்கு உட்பட்ட 42 ஏக்கர் நிலம் வக்ஃபு வாரியத்துக்கு உட்பட்டது என்று பத்தி ரப்பதிவு துறையில் தடங்கல் மனு வழங்கப்பட்டுள்ளது. அதன் காரண மாக ஊத்துக்குளி சார் பதிவாளர் அலுவ லகத்தில் சம்பந்தப்பட்டுள்ள நிலங் களுக்கு பத்திர பதிவு நடைபெறுவ தில்லை. இதனால் நிலங்களை வாங்கி வீட்டு மனைகளை, வீடுகளாக மாற்றி கிரயம் செய்து குடியிருந்து வருகிற மக்களும், விவசாய நிலங்கள் வைத் துள்ளவர்களும் பாதிக்கப்பட்டுள் ளனர். ஏற்கனவே சிறுஇனாம் ஒழிப்பு சட்டப்படி செட்டில்மெண்ட் தாசில் தாரால் பட்டா வழங்கப்பட்டு பல்வேறு பத்திர பதிவு நடவடிக்கை மேற் கொண்டு அனுபவித்துக் கொண்டுள் ளார்கள். இந்நிலையில் திடீரென்று வந்த இந்த தடையாணையால் பாதிக் கப்பட்ட மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
ஆகவே இந்நிலங் களின் மீதான பத்திர பதிவுக்கு விதிக்கப் பட்டுள்ள தடையை நீக்கிட உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். ஊத்துக்குளி வட்டம், செங்கப் பள்ளி வாரச்சந்தை ஞாயிறுதோறும் நடைபெற்று வருகிறது. மேற்படி சந்தை நடைபெறும் இடம் இந்துசமய அறநிலையத் துறைக்கு உட்பட்டது. அறநிலைத்துறை சார்பில் சுங்க வசூலும் நடைபெறுகிறது. இந்த சந்தையொட்டி கோபி-தாராபுரம் சாலையில் கடைகள் அமைக்கப்படுவ தாலும், வாகனங்கள் நிறுத்தப்படுவ தாலும் இயல்பான போக்குவரத்து பாதிக்கப்பட்டு விபத்துகளும் ஏற்பட வாய்ப்புகள் உருவாகிறது. அதேபோல் சந்தையின் நடுவில் பெரிய அளவி லான திறந்தவெளி கிணறு நீர் நிரம்பி தரைமட்ட அளவிலேயே அபாயகரமாக உள்ளது. சந்தைக்கு வருகிற நூற்றுக் கணக்கான மக்களில் எவரேனும் தவறி விழுந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேற்படி சந்தையில் வீதி விளக்கு, கழிப்பிட வசதி ஏது மில்லை. ஆகவே தாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு கோபி-தாராபுரம் சாலை யில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற் படாமல் இருப்பதற்கு உரிய நடவ டிக்கையும், சந்தை நடுவில் இருக்கிற கிணறுக்கு தடுப்புச் சுவர் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்கும், தெரு விளக்கு, கழிப்பிட வசதி செய் வதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஆர்.குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.