சேலம், டிச13- சேலத்தில் நடைபெற்ற பழங் கால தொன்மை பொருட்கள் கண் காட்சியில் ஆர்வத்துடன் மாணவர் கள் பங்கேற்று கண்டு கழித்து ஆச் சரியத்தில் மூழ்கினர். சேலம் மாநகரம் ஜெயராணி மேல்நிலைப்பள்ளியில் பழங்கால தொன்மை பொருட்கள் கண்காட்சி மற்றும் அறிவியல் கண்காட்சி நடை பெற்றது. மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி பங்கேற்று கண் காட்சியை துவக்கி வைத்தார். இதில், பழைய ரேடியோக்கள், புகைப் படக் கருவிகள், பிலிம் ரோல்கள், ஏர் கலப்பை, ராட்டினம், இரும்பு கருவிகள், கிராம போன் உள் ளிட்ட பொருட்களை மாணவ, மாணவிகள் கண்டுக்களித்தனர். பண்டைய காலத்தில் முன்னோர் கள் பயன்படுத்திய இயற்கை உண வுகள் மற்றும் மூலிகை பொருட் களை காட்சிப்படுத்தியிருந்தனர். இதுசம்பந்தமாக மாணவர்கள் கூறுகையில், கண்காட்சியில் உள்ள பொருட்களை இதுவரை கண்டதில்லை. அனைத்து பொருட் களும் பார்ப்பதற்கு அழகாக உள் ளது. தற்போது அனைத்து பொருட் களும் தானாக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பண்டைய காலத்தில் மனி தனின் உழைப்பு இருந்தால் மட்டும் தான் பொருட்களை இயக்க முடி யும் என்ற தன்மையில் பொருட்கள் இருந்துள்ளது. குறிப்பாக பண் டைய கடிகாரங்கள், சுவர் கடிகா ரங்கள், வானொலி பெட்டிகள், தொலைபேசி உள்ளிட்டவைகளை பார்த்து வியப்படைந்தோம், என்ற னர்.