districts

img

மாணவர்கள், கல்வித்துறை மீது தொடர் தாக்குதல்

சேலம், ஜன.12- தேசிய கல்வி கொள்கை, நீட் தேர்வு, பள்ளி, கல்லூரி கட்டணம் உயர்வு என மாணவர்கள் மீதும், கல்வித்துறை மீதும் தாக்குதல் நடத்தும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இந்திய மாணவர் சங் கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக மருத்துவ மாணவர்க ளின் கல்வி உரிமையையும், கல்வி  வாய்ப்பையும் பறித்து, மாநில உரிமை, கூட்டாட்சித் தத்துவத்தை  சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய  வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. தற்போது திமுக அரசு நீட் விலக்கு சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி நான்கு மாதங்கள் ஆகியும், குடி யரசு தலைவரின் ஒப்பதலுக்கு அனுப்பாமல் தமிழக ஆளுநர் அரசி யல் சட்டத்திற்கு எதிராக செயல் பட்டு வருகிறார். மேலும், அனைத் துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப் பினர்கள் குழு நீட் விலக்கு குறித்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்த மூன்று முறை சந்திக்க அனுமதி பெற்ற பின் பும் உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்காமல் தமிழக மக்களையும்,  நாடாளுமன்ற உறுப்பினர்களை யும் புறக்கணித்து வருகிறார். இது  தமிழக மாணவர்களையும், மக் களை உதாசீனப்படுத்துவது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும், தேசிய கல்வி கொள்கை எனும் பெயரில் போராடிப் பெற்ற  மாணவர் உரிமைகளைப் பறித்து, மாணவர்களை கல்வி நிலையங் களை விட்டு விரட்ட மூன்றாம் வகுப்பிலே பொதுத்தேர்வு, குலக் கல்வி, மொழி (இந்தி, சமஸ்கிருத) திணிப்பு என ஏராளமான பிற்போக் குத் தனங்களை ஏந்தி வரும் இக் கல்வி கொள்கையை எதிர்த்து புத னன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இந்திய மாண வர் சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன்ஒருபகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாணவர் சங்க மாவட்ட தலை வர் பவித்ரன் தலைமை வகித்தார். இதில், சங்கத்தின் மாநிலத் தலை வர் ஏ.டி.கண்ணன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் கவின்ராஜ் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டு ஒன் றிய பாஜக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.