கோவை மார்ச் 22- கோவை மாநகராட்சிக்குட் பட்ட 13 ஆவது வார்டு நஞ்சே கவுண்டன் புதூர் மற்றும் கே.கே.நகர் பகுதி வழியாக நீண்ட நாட் களாக வராத பேருந்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் முயற்சியில் மீண்டும் ஊருக்குள் வந்தது. கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட நஞ்ச கவுண்டன் புதூர் மற்றும் கே.கே. நகர் பகுதியில், கொரோன தொற்று ஊரடங்கு காலத்திற்கு முன்பு வரையில், காந்திபுரத்தி லிருந்து துடியலூர் வரை செல்லும் பேருந்து உடையாம்பாளையம் வழியாக கவுண்டர் மில் செல்வது வழக்கம். ஆனால், கொரோன ஊரடங்கு காலத்திற்கு பின்பு இந்த பேருந்து நிறுத்தப்பட்டது. இதனால் இந்த பகுதியில் வசிக் கும் மக்கள் பேருந்தில் பயணம் செய்வதற்கு, மேட்டுப்பாளையம் சாலை கவுண்டர் மில் பேருந்து நிறுத்தத்திற்கு சுமார் இரண்டு கிலோ மீட்டர் நடந்து சென்று பேருந்தில் செல்ல வேண்டி இருந்தது. இதுகுறித்து, பொதுமக்கள் சிபிஎம் மாமன்ற உறுப்பினர் சுமதி யிடம் கோரிக்கை வைத்தனர். இதனையேற்று, துறை சார்ந்த அதி காரிகளிடம் கோரிக்கை வைத்து வலியுறுத்தி வந்தார். இந்நிலையில், எஸ்18 வழித்தட பேருந்து நஞ்சை கவுண்டன் புதூர் மற்றும் கே.கே.நகர் பகுதி வழியாக வந்தது. பொது மக்கள் பேருந் தினை நாதஸ்வரம் வாசித்து மகிழ்ச் சியுடன் வரவேற்றனர். மேலும், தொடர் முயற்சி மேற்கொண்ட சிபிஎம் மாமன்ற உறுப்பினர் சுமதிக்கு நன்றி தெரிவித்தனர்.