நாமக்கல். ஏப்.7- அனுபவ நிலத்தை மீட்டுத்தரக் கோரி பள்ளிபாளையம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், எலந்தகுட்டை ஊராட்சி சின்னார் பாளையத்தில் ஈஸ்வரன் மற்றும் ஆறுமுகம் வகையறாக் களுக்கு அனுபவமான நிலம் உள்ளது. இந்நிலத்தை மாசு கட்டுபாட்டு வாரிய அலுவலகம் அமைப்பதற்கு தேவை யென கூறி, அங்கு வசித்து வந்த விவசாயின் குடும்பத்தை வருவாய்த்துறையினர் பலவந்தமாக அப்புறப்படுத்தி, ஆக் கிரமித்துள்ளனர். இதை கண்டித்து குமாரபாளையம் வட் டம், பள்ளிபாளையம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது இப்போராட்டத்தில், சிபிஎம் பள்ளிபாளையம் தெற்கு ஒன் றிய செயலாளர் ஆர்.ரவி, வடக்கு ஒன்றிய வாலிபர் சங்க நிர்வாகி மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.