இளம்பிள்ளை, ஏப்.26- மகுடஞ்சாவடியில் உள்ள மயா னத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கப் படாததாலும், தகன மேடை இல்லா ததாலும் இறந்தவர்களின் உடலை திறந்த வெளியிலேயே எரிக்கும் அவ லம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியத்துக்கு உட்பட்ட தப்பகுட்டை ஊராட்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றனர். இவர்கள், மகுடஞ்சாவடி ஒன்றியத்திற்குட்பட்ட ஐயனுார் நான்கு ரோடு அருகே உள்ள மயா னத்தை பயன்படுத்தி வருகின்றனர். சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த மயானத்தை முறையாக பரா மரிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது. மேலும், போதிய இடம் இல் லாததால் ஏற்கனவே புதைத்த இடத் தில் மீண்டும் உடல்களை புதைக்கும் அவல நிலை உள்ளது. இந்த மயா னத்தை சுற்றியும் தெரு விளக்குகள் இல்லை. முறையான தகனமேடை இல்லை. மேலும், மயானத்திற்கு சுற்றுச் சுவர் இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதும், எரிப் பதும், இறுதிக்காரியங்கள் செய்வது என அனைத்தும் திறந்த வெளியி லேயே நடைபெறுகிறது. எனவே மயானத்திற்கு சுற்றுச் சுவர், தகன மேடை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.