districts

img

திருவிழாவிற்காக அமைக்கப்பட்டிருந்த கடைகளின் மேற்கூரை இடிந்து விபத்து

திருப்பூர், ஏப்.10- பெருமாநல்லூர் கொண்டத்துக்கா ளியம்மன் கோவில் குண்டம் திரு விழாவிற்காக அமைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட தற்காலிக கடைக ளின் மேற்கூரை சரிந்து விழுந்தது. நல் வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர் சேதம்  ஏதும் ஏற்படவில்லை. திருப்பூர் மாவட்டம், பெருமாநல் லூர் பகுதியில் கொண்டத்து காளியம் மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோ விலில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும்  தேர்த்திருவிழா ஒரு வாரத்திற்கு நடை பெறும். லட்சத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வருகை தருவார்கள். இதை யொட்டி, கோவில் நிர்வாகத்தால் தற்கா லிக கடைகள் அமைக்க ஏலம் விடப்ப டும். இந்த ஏலத்தில் கலந்து கொண்டு கடைகள் அமைக்க பல ஊர்களில் இருந்து வியாபாரிகள் பங்கேற்பர். அந்த வகையில் இந்த ஆண்டும் ஏலம்  நடத்தப்பட்டு 150க்கும் மேற்பட்ட கடை கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில், திங்களன்று ஒரு கடையின் பொருட் களை காலி செய்து வாகனத்தில் எடுத்து செல்லும்போது, மேற்கூரை நிறுத்தப் பட்டிருந்த முட்டுக்கம்பத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில், 50க்கும் மேற்பட்ட கடைகளின் மேற் கூரை முழுவதுமாக சரிந்து விழுந்தது.  நல்வாய்ப்பாக இதில் உயிர் சேதம் ஏதும்  இன்றி சிறு காயங்களுடன் வியாபாரி கள் தப்பினர். காவல்துறையினர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட் டனர். எனினும் இவ்விபத்து குறித்து வழக்கு பதிவு செய்யப்படவில்லை. வட் டாட்சியர் மற்றும் வருவாய் துறையினர்  யாரும் இங்கு வந்து ஆய்வு செய்ய வில்லை. 

இதுகுறித்து வியாபாரிகள் கூறு கையில், மேற்கூரை போடுவதையும் சேர்த்துத்தான் 5000 ரூபாய் கட்டி கடை கள் அமைத்துள்ளோம். மேற்கூரை அமைக்கும் ஒப்பந்ததாரரின் அலட்சி யத்தால்தான் இந்த விபத்து நிகழ்ந்துள் ளது. முட்டு கொடுக்கும் கம்பிகளை குழி தோண்டி வைக்காமல், ஒப்புக்கு தரை மேலேயே வைத்துவிட்டு சென்றுள்ள னர். நல்லவேலை உயிர் சேதம் ஏதும்  இல்லை. ஆனால் வாகனங்கள் உட்பட  ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் இடி பாடுகளில் சிக்கியுள்ளது. இதற்கான இழப்பீட்டை யார் தருவார்கள். வியாபா ரிகளுக்கு தான் நஷ்டம் என்று கூறி னர். இதுகுறித்து ஒப்பந்ததாரர் கூறுகை யில், ஒரு வாரமாக அமைக்கப்பட்ட கடைகள் இங்கு இருக்கிறது. காற்று  அடித்து மேற்கூரை சாய்வதற்கு வாய்ப்பே இல்லை. வாகனம் முட்டுக் கம்பத்தின் மீது மோதியதாக சிலர்  தெரிவித்தனர். புதனுடன் தற்காலிக கடைகளுக்கான ஒப்பந்தம் முடிகி றது. வியாபாரிகள் கேட்டு கொண்ட தாலேயே கூரைகளைப் பிரிக்காமலி ருந்தோம். மேலும் சில கடைகாரர்கள் வியாபாரத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாக  கூறி சில முட்டுகளை பிரித்துள்ளனர். இதுவும் இந்த விபத்துக்கு காரணம்.  வியாபாரிகளை குறை சொல்ல வில்லை. அடுத்த, அடுத்த ஊர்களுக்கு  செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் நிகழ்ந்த விபத்து இது, என்றார். இப்படி ஒரு விபத்து நடைபெற்றால்,  வருவாய் துறை அதிகாரிகள், வட்டாட்சி யர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வழக்குப்பதிவு  செய்திருக்க வேண்டும். திங்களன்று சரிந்த மேற்கூரை ஞாயிறன்று சரிந் திருந்தால் உயிர் சேதங்கள் ஏற்பட் டிருக்கும். இனி இது போல் நடக்காமல்  இருக்க கடைகள் அமைத்த பிறகு அரசு  முறையாக ஆய்வு மேற்கொள்ள வேண் டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரி வித்தனர்.