திருப்பூர், நவ.25 - திருப்பூர் மாநகராட்சி பட்டுக் கோட்டையார் நகர் பகுதியில் விடு பட்டவர்களுக்கு பட்டா கிடைக் காத வரை, திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் குடும்பத் தோடு நவம்பர் 27 முதல் “வீடு திரும் பாத போராட்டம்” நடத்துவது என்று பட்டுக்கோட்டையார் நகர் குடியி ருப்போர் நலச்சங்கம் முடிவு செய் துள்ளது. திருப்பூர் தெற்கு தாலுகா நல் லூர் ராக்கியபாளையம் திருப்பூர் மாநகராட்சி 55ஆவது வார்டு பட்டுக் கோட்டையார் நகர் வடக்குப் பகுதி யில் 192 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். அவர்கள் குடியி ருந்து வரும் வீட்டுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த 35 ஆண்டுக ளாக தொடர்ந்து போராடி வரு கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முன் முயற்சி யால் பட்டா பெறுவதற்கு மாவட்ட அளவில் பணிகள் முடிவடைந்து, சென்னையில் உள்ள நில சீர்திருத்த ஆணையரின் ஒப்புதலுக்கு அனுப் பப்பட்டு பல மாதங்கள் கடந்துள் ளது. இதன்மீது இன்று வரை மேல் நடவடிக்கை இல்லை. சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பி னர், மாவட்ட ஆட்சியர் அனைவ ரும் வலியுறுத்தியும் இன்று வரை தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில் இன்றைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு இல்லாமலும், 30க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லாமலும், வீட்டு வரிகள் முழுமையாக இல்லாமலும் இருந்து வருகின்றனர். இது பற்றி தொடர்ந்து பல்வேறு வடி வங்களில் வலியுறுத்தியும் தீர்வு ஏற் படாத காரணத்தால் வேறு வழி யின்றி வருகிற (நவ.27) புதனன்று தீர்வு கிடைக்கும் வரை “வீடு திரும் பாத போராட்டம்” என்ற போராட் டத்தை, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தை குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் நடத்த இருப்ப தாக, ஞாயிறன்று நடைபெற்ற குடியிருப்போர் நலச் சங்க கூட்டத் தில் அறிவித்துள்ளனர். மேற்கண்ட போராட்டத்திற்கு பிறகும் தீர்வு ஏற்படவில்லை என் றால் அடுத்த கட்டமாக ஒரு மிகப் பெரிய அளவிலான போராட் டத்தை முன்னெடுக்க வேண்டி வரும் என்பதையும், இந்த நேரத் தில் சம்பந்தப்பட்ட அதிகாரிக ளுக்கு தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளனர். இந்த மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண தமிழ்நாடு முதலமைச்சர் தலை யிட வேண்டும் என பட்டுக்கோட்டை யார் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ள னர்.