districts

img

வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் போராட்டம்

தருமபுரி, டிச.7- மாற்றுத்திறனாளிகளாக இருக்கும் கிராம உதவி யாளர்கள் பெற்று வந்த எரி பொருள் படி ரூ.2500ஐ மீண் டும் வழங்க வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு வருவாய்  கிராம ஊழியர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். தருமபுரி மாவட்டம் வட்டாச்சியர் அலுவ லகம் முன்பு நீதி கேட்டு நடைபெற்ற காத்தி ருப்பு போராட்டத்தில், வட்டத் தலைவர் எம்.எம். முருகன் தலைமை வகித்தார். மாவட்டச்  செயலாளர் ரங்கன், வட்டச் செயலாளர் சிவ காமி, வட்டப் பொருளாளர் மோகன், கௌர வத் தலைவர் நரசிம்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  முன்னதாக காத்திருப்பு போராட்டத் தில், கருணை அடிப்படையில் வாரிசுதா ரர்களுக்கான வேலையை மீண்டும் வழங்க  வேண்டும். மாற்றுத்திறனாளிகளாக இருக் கும் கிராம உதவியாளர்கள் பெற்று வந்த  எரிபொருள் படி ரூ.2500ஐ மீண்டும் வழங்க  வேண்டும். வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும். சிபிஎஸ் திட்டத்தில் பணிபு ரிந்து ஓய்வு பெற்றவருக்கும், இறந்து போன வர்களுக்கும் அவர்களிடலிருந்து பிடித்தம்  செய்த தொகையை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்கிற  கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங் களை எழுப்பினர்.