districts

img

ரூ.68 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகள் அமைச்சர் திறந்து வைத்தார்

திருப்பூர், அக்.7- வெள்ளகோவில் நகராட்சியில் ரூ.68 லட்சம் மதிப்பீட்டில்  முடிவுற்ற திட்டப் பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  சனியன்று திறந்து வைத்தார். திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் நகராட்சி, துரை ராம சாமி நகரில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு உயர் நிலைப்பள்ளின் கூடுதல் வகுப்பறை கட்டிடம், ரூ.48 லட்சம்  மதிப்பீட்டில் கட்டப்பட்ட கால்நடை கிளை மருந்தக கட்டிடம்  என மொத்தம் ரூ.68 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்ட பணி களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் சனியன்று திறந்து வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்  அ.லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தியாகராஜன், உதவி இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) சக்திவேல் பாண்டியன், வெள்ளகோவில் நகர்மன்றத்தலைவர் கனிய ரசி முத்துக்குமார், வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர்  வெங்கடேஷ்வரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்  மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.