கோவை பூமார்க்கெட்டில் பூக்களின் விலை கடுமை யாக உயர்ந்துள்ள போதிலும், பொங்கல் விழாவை யொட்டி விற்பனையில் மந்தம் இல்லாமல் அமோக விற்பனை யானது. கோவை பூ மார்க்கெட்டிற்கு, சத்தி, நிலக்கோட்டை உள்ளிட்ட இடங்களிலிருந்து தினசரி மூன்று டன் வரையில் மல்லிகைப் பூக்களும், காரமடை உள்ளிட்ட இடங்களில் இருந்து ஒரு டன் முல்லைப் பூக்களும் விற்பனைக்காக வரும். ஆனால், பனியின் காரணமாக வரத்து குறைந்து. தற்போது தினமும் தலா 300 கிலோ மல்லிகை, முல்லை;g பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. வரத்து குறைந் ததாலும், பொங்கல் பண்டிகை நெருங்குவதாலும் மல்லிகை முல்லை உள்ளிட்ட பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள் ளது. தற்போது ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.5,000-க்கும், முல்லைப் பூ ரூ.3,000-க்கும், காக்கடா ரூ.1,000-க்கும், சம்பங்கி ரூ.120-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும், அரளி கிலோ ரூ.400-க் கும், ரோஜா ரூ.240-க்கும் விற்கப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களுக்கு பூக்களின் விலை அதிகரிக்கும் என வியாபாரி கள் தெரிவித்தனர்.