நாமக்கல், மே 23- முட்டையின் விலை 30 பைசா குறைக் கப்பட்டு, பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.45 ஆக நிர்ணயிக்கப்பட்டது நாமக்கல் மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு 4 கோடி கோழிகள் மூலம், 2.5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயிக்கும் விலைக்கு, பண்ணையாளர்களிடமிருந்து வியாபாரிகள் முட்டையை கொள்முதல் செய்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் நாமக்கல் மாவட்டத்திலிருந்து முட்டைகள் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. மேலும், தமிழக அரசின் சத்துணவு திட்டத் திற்காகவும் முட்டை லோடுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில் திங்களன்று நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு (என்.இ.சி.சி) கூட்டம், அதன் தலை வர் செல்வராஜ் தலைமையில் நடைபெற் றது. கூட்டத்தில், ஏற்கனவே ரூ.4.75 ஆக இருந்த ஒரு முட்டையின் விலை 30 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ. 4.45 ஆக நிர்ண யிக்கப்பட்டது. தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் முட்டை கள் தேக்கம் அடைந்துள்ளது. மேலும், கேரளாவில் முட்டை நுகர்வு குறைந்துள் ளதால் இந்த விலை குறைப்பு ஏற்பட்டுள் ளது. ஒரு முட்டைக்கு 30 பைசா சரிவ டைந்ததால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். முன்னதாக, கடந்த ஒரு வாரமாக 2 நாட்களுக்கு ஒரு முறை என முட்டை விலை உயர்த்தப்பட்டு வந்தது. அதன்படி கடந்த 12 ஆம் தேதி ரூ.3.65 பைசாவாக இருந்த ஒரு முட்டையின் விலை, 25 பைசா உயர்ந்து ரூ.3.90 ஆனது. இதையடுத்து 14 ஆம் தேதி 25 பைசா மற்றும் 16 ஆம் தேதி 35 பைசா, 19 ஆம் தேதி 25 பைசா உயர்த்தப்பட்டது என்பது குறிப்பி டத்தக்கது. இதேபோல், பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.126 ஆக பி.சி.சி. அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 100 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.