districts

img

மூதாட்டி தவறவிட்ட பணத்தை மீட்டு ஒப்படைத்த போலீசார்

இளம்பிள்ளை, மார்ச் 24- எடப்பாடி பேருந்து நிலையத்தில், மூதாட்டி ஒருவர் தவறவிட்ட பணத்தை, சில மணி நேரத்திலேயே எடப்பாடி காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு  மீட்டு ஒப்படைத்த னர். சேலம் மாவட்டம், எடப்பாடி பேருந்து நிலையத்தில் புதனன்று வெள்ளச்சி என்ற மூதாட்டி ஒருவர் தனது 50 ஆயிரம் ரூபாய் பணத்தை தவறவிட்டார். இதுகுறித்து எடப்பாடி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதை யடுத்து சில மணி நேரத்திலேயே எடப்பாடி காவல்துறை யினர் துரிதமாக செயல்பட்டு தவறவிட்ட 50 ஆயிரம் ரூபாயை கண்டுபிடித்து மூதாட்டி வெள்ளச்சியிடம் ஒப்படைத் தனர். காவல் துறையினரின் இத்தகைய செயலை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.