districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கல்லா கட்டும் லாட்டரி முதலைகள் கண்டு கொள்ளாத காவல்துறை

சேலம், ஜன.27- தமிழ்நாட்டு அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி  சீட்டுகளை, அலுவலகம் அமைத்து விற்பனை செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. தமிழக அரசால் தடைசெய் யப்பட்ட லாட்டரிகளை திருட்டுத்தனமாக விற்பனை நடை பெற்று வந்த நிலையில், தற்போது கூடாரம் அமைத்து வெளிப்படையாக நடைபெறுவதை காவல்துறையி னர் கண்டு கொள்ளாமல் இருப்பது பொதுமக்களி டையே அதிருப்த்தியை வெளிப்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், டால்மியா போர்ட்-யை அடுத்த தட்டாஞ் சாவடி பகுதியில் தமிழ்நாட்டு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை அலுவலகம் அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். அதனை பலர் போட்டி போட்டுக்கொண்டு வாங்கும் வீடியோ வெளியாகி உள் ளது. நாள்தோறும் கூலித்தொழில் செய்து வரும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் நாள்தோறும் நூற்றுக் கணக்கில் லாட்டரி வாங்கி வருவதால் அவர்களின் வாழ்வாதா ரம் பாதிக்கப்படுகிறது. அலுவலகம் அமைத்து போலி லாட்டரி விற்பனை செய்து வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். மேலும், இந்த லாட்டரி விற்பனையை தடுக்க  போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், கண்டு கொள்ளாமல் இருப்பது அரசியல் நோக்கர்கள், சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுபாட்டில்கள் பறிமுதல்

சூலூர், ஜன.27-  கோவை புறநகர் பகுதிக ளுக்கு கர்நாடகாவிலிருந்து அதிகளவில் மதுபானங்கள் கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் சுல் தான் பேட்டை போலீசார் சூலூர், செல்லக்கரிச்சல் பகு தியில்  வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  அவ்வழியாக வந்த லாரியை  துரத்தி பிடித்து சோதனை செய்தனர். அதில், உயர் ராக மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக லாரி ஓட்டுநரான சத்தியமங்கலத்தைச் சேர்ந்த  ஜாகிர் என்பவரை கைது செய்த போலீசார், 80 பாட்டில் உயர் ரக மது மற்றும் லாரியையும் பறிமுதல் செய்தனர்.

பேருந்து நிறுத்தம் அமைக்க மாதர் சங்கம் கோரிக்கை

அவிநாசி, ஜன.27- ஆட்டையாம்பட்டி அருகே பேருந்து நிறுத்தம் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கிராம சபை கூட் டத்தில் மாதர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அவிநாசி ஒன்றியம், வேலாயுதம்பாளையம் ஊராட்சிக் குட்பட்ட ஆட்டையாம்பாளையம் பகுதியில் 400க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவிநாசியில் இருந்து கோவை செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந் துகள் ஆட்டையாம்பாளையம் பகுதியில் நிற்காமல் செல் கிறது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகி அவிநாசி  புதிய பேருந்து நிலையம் அல்லது பழைய பேருந்து நிலை யம் சென்று பயணிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதே போல கருவலூர் மற்றும் கருமத்தம்பட்டி பகுதியில் இருந்து  வருகின்ற பேருந்துகள், ஆட்டையாம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் பேருந்து நிறுத்தத்தை தாண்டி  நிற் கிறது, இதனால் பள்ளி குழந்தைகள், பயணிகள் அனைவரும்  குழப்பம் அடைகின்றனர். இதற்குத் தீர்வு ஏற்படுத்துகின்ற வகையில், ஏடிஎம் இயந்திரத்தின் அருகில் பேருந்து நிறுத் தம் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வேலாயுதம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வேலுச்சாமி-யிடம் மாதர் சங்கத்தினர் கோரிக்கை மனுவினை அளித் தனர். இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின்  ஒன்றிய செயலாளர் செல்வி, கிளைத் தலைவர் ஜோதிமணி,  கிளைச் செயலாளர் சண்முகவேணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குழந்தைகள் மைதானம் அமைக்க கோரிக்கை

அவிநாசி,ஜன.27- அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசுக் குச் சொந்தமான  காலி இடத்தை குழந்தைகள் மைதானமாக  மாற்றித் தர வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னர் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர். அவிநாசி பேரூராட்சி, 9 ஆவது வார்டுக்குட்பட்ட, முத்து செட்டிபாளையம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள நூற்றுக்கும்  மேற்பட்ட குழந்தைகள் விளையாடுவதற்கு மைதானம் இல்லை. அதேபோல இப்பகுதியில் இருந்து வருகின்ற அங் கன்வாடி குழந்தைகளுக்கும் விளையாட்டு மைதானம் இல்லை. எனவே அங்கன்வாடி பின்புறமாக உள்ள அர சுக்கு சொந்தமான  காலி இடத்தை குழந்தைகள் மைதா னமாக மாற்றி அமைத்துத்தர வலியுறுத்தி பேரூராட்சி ஆணையரிடம் வாலிபர் சங்கத்தினர் மனு அளித்தனர்.  இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, முன்னாள் ஒன்றிய செய லாளர் பழனிச்சாமி, முன்னாள் ஒன்றிய தலைவர் பாபு, கிளை  நிர்வாகிகள் அவிநாசியப்பன், வடிவேல், பன்னீர் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்க சிபிஎம் கோரிக்கை

அவிநாசி, ஜன.27- பழுதடைந்த மேல்நிலைத் தொட்டியை அப்புறப்படுத்தி ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும், புதிய மேல்நிலைத் தொட்டி   கட்டப்படாமல் உள்ளது. எனவே புதிய மேல் நிலை தொட்டி கட் டித்தர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத் துள்ளது. அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட  செந்தில் நகர், சென்னிமலைகவுண்டர் நகர், வஞ்சிபாளையம்  மேற்கு, ஏடிகாலனி, போயர் காலனி ஆகிய பகுதிகளில் 150க்கும்  மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலை யில், சென்னிமலைகவுண்டர் நகர் அருகில் உள்ள மேல் நிலை குடிநீர் தொட்டி மூலமாகப் பல பகுதிகளுக்குக் குடிநீர்  விநியோகம் செய்யப்பட்டது. இத்தொட்டி பழுதடைந்ததால் ஒரு வருடங்களுக்கு  முன்பே  ஊராட்சி நிர்வாகத்தினர் அப்பு றப்படுத்தி விட்டனர். ஆனால், தற்போது வரை புதிய குடிநீர்  தொட்டி அமைக்கப்படவில்லை.இதனால், குடிநீர் கிடைப்ப தில் பொதுமக்களுக்குச் சிரமம் ஏற்படுகிறது. எனவே புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டித்தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வட்டார வளர்ச்சி ஆணையர் விஜய குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.  இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு  உறுப்பினர்கள் பழனிச்சாமி, மோகனசுந்தரம், கிளை செயலா ளர் ராஜா, கதிர்வேல், மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நடக்க இருப்பவை

19 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா இலக்கியங்கள் காலத்தை வென்று நிற்பதற்குக் காரணம்? படைப்பாளிகளா? படிப்பாளிகளா? தமிழ் இனிமைப் பட்டிமன்றம் நடுவர்: பேராசிரியர் கு.ஞானசம்பந்தன். நாள்: சனிக்கிழமை. நேரம்: மாலை 6 மணி. இடம்: வேலன் ஹோட்டல் மைதானம்.

அணைகளின் நிலவரம் 

திருமூர்த்தி அணை நீர்மட்டம்:53.17/60அடி நீர்வரத்து:762கன அடி வெளியேற்றம்:856கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்:77.23/90அடி.நீர்வரத்து:228கனஅடி வெளியேற்றம்:869கனஅடி

கிராம சபையில் கேள்வி கேட்டதால் ஆத்திரம்

மாற்றுத்திறனாளியைத் தாக்கிய பாஜக நிர்வாகி

அவிநாசி, ஜன.27- அவிநாசி அருகே கிராம சபை  கூட்டத்தில் கேள்வி கேட்ட மாற்றுத்திற னாளியை பாஜக நிர்வாகி தாக்கிய  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.  திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், புஞ்சைதாமரைகுளம் ஊராட்சிக்குட்பட்ட வடுகபாளையம் முதல் கூட்டபள்ளி கோபி சாலை வரை  சாலை அமைக்கும் பணிகள் நடை பெற்றுக் கொண்டிருந்தது. புஞ்சை தாமரைகுளம் ஊராட்சிக்கு சொந்த மான ஆழ்துளை கிணற்றிலிருந்து, நீரை  எடுத்து சாலை அமைக்கும் பணிக் காக பயன்படுத்தியுள்ளனர். இதனை  அறிந்த மாற்றுத்திறனாளி பழனிச் சாமி என்பவர், குடியரசு தினத்தன்று  நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி தண்ணீரை, சாலை  அமைக்கும் பணிக்காக பயன்படுத்த  எதற்கு அனுமதி அளிக்கிறீர்கள் என்று  கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு பாஜக கிளை நிர்வாகி விஷ்ணு (எ)  வெங்கடாசல மூர்த்தி, அதிமுகவை சேர்ந்த சரவணகுமார், பழனிச்சாமி ஆகியோர், “ நீ கேள்வி கேட்பதா”  என்று மூவரும் சேர்ந்து மாற்றுத் திறனாளி பழனிச்சாமியை  கீழே தள்ளி விட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.  இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த  பொதுமக்கள் தடுத்து, அவரை மீட்டு  திருப்பூர் அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து  சேவூர் காவல்துறையினர் விசாரணை  நடத்தி வருகின்றனர்.  மாற்றுத்திறனாளியை தாக்கிய இந்த பாஜக கிளை நிர்வாகி வெங்க டாசல மூர்த்தியின் மனைவி திவ்யா ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்து  வருகிறார். இதேபோன்று ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வரும் சரவணகுமார் முகநூல் பக்கத்தில் தொல்.திருமாவளவனை அவதூறாகப் பதிவு செய்த காரணத்திற்காக வன் கொடுமைச் சட்டத்தின் கீழ் சிறை சென்று   பிணையில் வெளிவந்தவர். மேலும், வடுகபாளையம்  கூட்டுறவு சொசைட்டி யின் இயக்குநர்கள் மூலமாக இவர் மீதான  ஊழல் குற்றச்சாட்டு நீதிமன்றம்  வரை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாசன நீர் திறப்பு அதிகரிப்பு

ஈரோடு, ஜன.27- பவானி சாகர் அணையி லிருந்து 2ஆம் போக புஞ்சை  பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்ட மக் களின் முக்கிய குடிநீர் ஆதார மாக பவானிசாகர் அணை உள்ளது. இந்நிலையில்  கடந்த சில நாட்களுக்கு முன்பு அணையில் இருந்து 2ஆம் போக புஞ்சை பாச னத்திற்காக கீழ்பவானி  வாய்க்காலுக்கு தண்ணீர்  திறந்து விடப்பட்டு வரு கிறது. வெள்ளியன்று முதல் 2000 கன அடியாக  அதிகரித்து, தண்ணீர் திறக் கப்பட்டு வருகிறது.