அவிநாசி, மே 26 – அவிநாசியில் முன்னனுமதி பெறா மல் சிவனடியார் பக்தர்கள் என்ற அமைப்பினர் ஊர்வலம் நடத்தினர். சட் டப்படி செயல்பட வேண்டிய காவல் துறையினர் அந்த ஊர்வலத்துக்கு அனு மதி கொடுத்து போக்குவரத்தை மாற்றி விட்டனர். இந்த ஊர்வலத்திற்காக, நோயாளியுடன் வந்த ஆம்புலன்ஸ் வாக னத்தையும் காவல் துறையினர் வழி மாற்றி விட்ட நிகழ்வு அவிநாசி மக்களி டம் அதிருப்தியை ஏற்படுத்தி உள் ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்குள் திங்க ளன்று இரவு புகுந்த நபர் கோவில் சிலை கள், உண்டியலை சேதப்படுத்தி வேல் மற்றும் பூஜை பொருட்களை திருடி னார். அங்கிருந்து வெளியேற முடியாத நிலையில் ராஜகோபுரத்தின் மேல் ஏறி பதுங்கிய அந்த நபரை காவல் துறை யினர் பிடித்தனர். அவிநாசியை அடுத்த சாவக்கட்டுப்பாளையம் அருகே வெள் ளமடை பகுதியைச் சேர்ந்த சரவணபா ரதி (32) என்ற அந்த நபரை காவல் துறை யினர் கைது செய்தனர். தனிநபர் கோயிலுக்குள் புகுந்து சிலைகளை சேதப்படுத்திய இந்த சம்ப வத்தில், “இந்து கோயில்களுக்கு பாது காப்பு இல்லை” என்று சொல்லி, இந்து அமைப்புகள் இப்பிரச்சனையை அரசி யலாக்க முயற்சி மேற்கொண்டுள்ள னர். இதற்கு அவிநாசி ஒன்றிய மதச் சார்பற்ற ஜனநாயக கட்சிகள் கடும் கண் டனம் தெரிவித்துள்ளன. இந்து முன்னணி அமைப்பினர் வெள்ளியன்று, அவிநாசிலிங்கேஸ் வரர் கோவில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இதற்கு காவல் துறை அனுமதி மறுத்த நிலை யில் புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் மாற்றப்பட்டது.
எனினும் “சிவனடியார் பக்தர்கள்” என்ற அமைப்பினர் எந்த முன்னனும தியும் பெறாமல், திடீரென அவிநாசி பெரிய கோவில் முன்பிருந்து ஊர்வல மாக புறப்பட்டு திருப்பூர் சாலையில் புதிய பேருந்து நிலையம் வரை சென்ற னர். இதில், பயணியர் விடுதி முன்பு காவல்துறை மூலமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. அவசரமாக நோயாளிகளுடன் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் வழிமாற்றி விடப்பட்டது. இதனை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ஏ. ஈஸ்வரமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சண்முகம், துணைச் செயலாளர் கோபால், முத்து சாமி, ஆகியோர் அவிநாசி டிஎஸ்பியி டம் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி என்று சொல்லிவிட்டு, ஊர்வலத்துக்கு எப்படி அனுமதித்தீர்கள், நோயாளியை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் கூட பாதை மாற்றி அனுப்பி வைக்கிறீர்கள். இதுபோன்ற நடவடிக்கை சரி இல்லை. அதேபோல ஆர்ப்பாட்டத்திற்கு விதிமீறி கொடி கட்டியுள்ளனர். இவர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சேபம் தெரிவித்தனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக டிஎஸ்பி உறுதியளித்தார். சட்டப்படி செயல்பட வேண்டிய காவல் துறையினர், அனுமதி பெறாமல் நடத்திய ஊர்வலத்திற்காக ஆம்பு லன்ஸ் வாகனத்தைக்கூட, வழி மாற்றிய சம்பவம் அவிநாசி மக்களிடம் கடும் அதி ருப்தியை ஏற்படுத்தி உள்ளது.