கோவை, அக். 23 - கோவை - சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் உண்டியல் வசூலில் ஈடுபட்டிருந்த மாணவர், வாலிபர் சங்கத் தினரிடம் அனுமதியில்லாமல் உண்டியல் வசூல் செய்யக் கூடாது எனக்கூறி உண்டியலை பறித்து சென்ற சிங்கா நல்லூர் காவல்துறையினரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நவம்பர் 3ஆம்தேதி வேலையின்மைக்கு எதிராக டெல்லியில் பேரணி நடைபெற உள்ளது. இவ்வியக்கத்திற்கு நிதி திரட்ட வாலிபர் சங்கத்தின் கோவை மாவட்ட நிர்வாகிகள் விவேகானந்தன், அர்ஜுன், தினேஷ் ராஜா, மணிபாரதி மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் அசாருதீன், பிரவீன், கிருபாகரன் உள்ளிட்டோர் கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலை யத்தில் உண்டியல் வசூலில் ஈடுபட்டிருந்தனர். பொதுவாகவே இவ்வமைப்பினர் தங்களின் அமைப் பின் நிதித்தேவைக்காக சிங்காநல்லூர், காந்திபுரம், உக்கடம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களிலும், ரயில்வே நிலையம் போன்ற பகுதிகளிலும் நிதி வசூலில் ஈடுபடுவர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதுபோன்ற உண்டியல் வசூல் இயக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் வசூலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, அங்கு வந்த சிங்கா நல்லூர் காவல் ஆய்வாளர் வினோத்குமார் மற்றும் காவல் துறையினர் எங்களிடம் அனுமதி வாங்காமல் எப்படி வசூல் செய்யலாம் என்று பொதுமக்கள் முன்னிலையிலேயே தரக் குறைவாக பேசியுள்ளனர். நாங்கள் கார்ப்ரேட்டுகளிடம் நிதியை பெற்று இயக்கம் நடத்துபவர்கள் அல்ல, உழைப் பாளி மக்களிடம் நிதியை பெற்று இம்மக்களின் உரிமைக் காக போராடுபவர்கள் என வாலிபர், மாணவர் சங்கத் தினர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இது காவல் துறையினருக்கு கௌரவ பிரச்சனையாக மாறவே, எங்களையே எதிர்த்து பேசுகிறாயா எனக்கேட்டு உண்டி யலையும் பிடிங்கி, நிர்வாகிகளையும் காவல் நிலையத் திற்கு குற்றவாளிகளை போல நடத்தியே கூட்டிச்சென் றுள்ளனர். யார், எந்த அமைப்பு என்கிற அடிப்படையான புரிதல்கூட இல்லாமல் சிங்காநல்லூர் காவல்துறையினரின் நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை கேள்விப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், செயற் குழு உறுப்பினர்கள் வி.தெய்வேந்திரன், யு.கே.சிவஞானம் ஆகியோர் உடனடியாக சிங்காநல்லூர் காவல் நிலை யத்திற்கு சென்றனர். இதனையடுத்து வாலிபர், மாணவர் சங்க அமைப்புகள் குறித்து காவல்துறையினருக்கு தெரிவித்து வாலிபர், மாணவர் சங்க நிர்வாகிகளை மற்றும் உண்டி யலை மீட்டு சென்றனர்.