districts

img

20 வருடமாக ஓய்வூதியம் தராமல் இழுத்தடிப்பு ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜன.30- தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை யில் பணியாற்றி ஓய்வு பெற்று, 20 ஆண்டுகள் கடந்தும் ஓய்வுதியம் வழங் காத தமிழக அரசை கண்டித்து தமிழ் நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதி யர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.  சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட் சியில் அங்கன்வாடி குழந்தைகள் நல  உதவியாளர்களாக 1982 முதல் 2003 வரை பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் பி.அங்கம்மாள், பி.சம்பூர்ணம். இவர்க ளுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஓய்வூதியம் தராமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை மனு அளித்தும் எந்தவொரு பலனும் அளிக்கவில்லை. ஓய்வூதியம் பெற தகுதி இருந்தும், தற்போது ஓய்வூதியம் பெறுவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.  இந்நிலையில், சமூக நலத்துறை யின் இந்த மெத்தன போக்கை கண் டித்து, பாதிக்கப்பட்ட இரண்டு குழந் தைகள் நல உதவியாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என  வலியுறுத்தி சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஆர்.ஜோதி மதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக் கைகளை விளக்கி மாவட்டச் செயலா ளர் சி. ராஜ்குமார், இணைச் செயலா ளர் ஆர்.அருள்மொழி, மாவட்டத் துணைத் தலைவர் எம்.கே. ராமச்சந் திரன் மாநில செயற்குழு உறுப்பினர் இ.கோவிந்தராஜ்  ஆகியோர் கண்டன  உரையாற்றினர். மாவட்ட பொருளாளர் எ.அருணகிரி நிறைவுறையாற்றினார். இதில் ஓய்வு பெற்ற அனைத்து துறை  ஓய்வூதியர் சங்கத்தினர் திரளானோர் பங்கேற்றனர்.