தருமபுரி, ஜன.29- மகன் இறப்பு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பெற்றோர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து அம்மனுவில் கூறியிருப்பதா வது, தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வேட கட்டமடுவு கிராமம் அருந்ததியர் சமூகத் தைச் சேர்ந்த தம்பதி குமார் – வாசுகி. இவர் களது மகன் சுள்ளான். அரூர் தனியார் கல் லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந் தார். மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை எனது மகன் காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணை பார்க்க ஈட்டியம்பட்டி சென்றுள் ளார். ஆனால், ஈட்டியம்பட்டி சாலையோரம் இறந்த நிலையில் என் மகன் மீட்கப்பட்டார். இதுகுறித்து அரூர் காவல் துறையினர் வழக் குப்பதிவு செய்தனர். என் மகனை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். அவர் இறந்து 2 மாதங் களாகியும் பிரேத பரிசோதனை அறிக்கை வழங்கவில்லை. என் மகன் இறப்பு வழக்கில் எந்த விசாரணையும் மேற்கொள்ளப்பட வில்லை. எனவே, என் மகன் இறப்பு வழக்கில் கொலை குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள் ளது.