கோவை, ஏப்.23- கோவை வெள்ளியங்கிரி மலை ஏறிய வாலிபர் ஏழாவது மலையிலி ருந்து கிழே விழுந்து உயிரிழந்த சமபவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே மாதத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் வெள்ளியங் கிரி கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். பிப்ர வரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படு கின்றனர். இந்நிலையில், கடந்த 18 ஆம் தேதியன்று காலை திருப்பூர் எஸ்.வி. காலனிப் பகுதியைச் சேர்ந்த வீரக் குமார் என்ற 31 வயதான நபர், தனது நணபர்களுடன் வெள்ளியங் கிரி மலையேறி உள்ளார். சாமி தரி சனம் செய்து விட்டு கீழே இறங்கும் போது, ஏழாவது மலையில் இருந்து கீழே விழுந்து விட்டார். இதில் அவ ரது வயிறு மற்றும் காலில் காயம் ஏற்பட்டு உள்ளது. இதனைப் பார்த்த அவரது நண்பர்கள் கோவில் நிர்வா கத்திற்கும், வனத் துறையினருக்கும் தகவல் அளித்தனர். பின்னர் சுமை தூக்கும் பணியா ளர்கள் அவரை மலையில் இருந்து கீழே கொண்டு வந்தனர். பின்னர் ஆம் புலன்ஸ் மூலம் பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் வீரகுமார், கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக் காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வீரக்குமார் சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். பின்னர் உடற்கூ ராய்விற்காக அரசு மருத்துவமனை யில் அவரது உடல் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆலாந்துறை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வெள்ளியங்கிரி மலையேறிய மேலும் ஒரு பக்தர் உயிரிழந்த சம்ப வம் சோகத்தை ஏற்படுத்தி உள் ளது. மலையேறும் பக்தர்களின் பாது காப்பு கருதி, மருத்துவ முகாம்கள் அமைத்தும், ட்ரோன் மூலம் கண் காணிப்பு நடவடிக்கைகளையும் வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், திருப் பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் மலையில் இருந்து தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்ப டுத்தியுள்ளது.