தருமபுரி, ஜூலை 12- அரூர் நகராட்சியாக தரம் உயர்த் தப்படும் என முதல்வர் அறிவிப்பிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வர வேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிபிஎம் தருமபுரி மாவட்டச் செயலாளர் அ.குமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில், கடந்த வியாழ னன்று தருமபுரி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்டத்தின் வளர்ச்சிக் காக பல்வேறு திட்டங்களை அறிவித் துள்ளார். அதில், அரூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்துவது, அரூர் அரசு மருத்துவமனை மேம் பாடு, வெண்ணாம்பட்டி ரயில்வே மேம் பாலம், சிட்லிங், அரசநத்தம் ஆகிய பகு திகளில் பழங்குடியினர் உற்பத்தி செய் யும் ராகி, சாமை, வரகு உள்ளிட்ட தானி யங்களை மதிப்புக் கூட்டுப் பொருளாக் குவதற்கு கிடங்கு, பொதுச்செயலாக்க மையம், தீர்த்தமலையில் துணை வேளாண் விரிவாக்க மையம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறி வித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற் காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கி றது அத்தோடு தருமபுரியில் சிப்காட், காவிரி உபரிநீர்த் திட்டம், தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப் பட்டுள்ள ஈச்சம்பாடி அணையில் இருந்து மொரப்பூர், கடத்தூர் பகுதி களில் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரப்பும் திட்டம், கோட்டையூர் பாலம் உள்ளிட்ட ஏற்கனவே அறிவிக்கப் பட்டுள்ள திட்டங்கள் தொடங்கி வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அமலாகவில்லை. இத்தகைய திட்டங் களை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.