திருப்பூர், டிச.30- திருப்பூரில் பழுதடைந்து சீர்குலைந் துள்ள சாலையைச் செப்பனிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நெடுங் சாலைத் துறை அலுவலகத்தை முற்றுகை யிட்டு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். திருப்பூர் பி.என்.ரோடு பூலுவபட்டி சாலைப் பிரிவிலிருந்து வாவிபாளையம் வரை செல்லக்கூடிய நெடுஞ்சாலையில் நெருப்பெரிச்சல், தோட்டத்துப்பாளையம் சாலை பகுதிகள் கடந்த பல மாதங்களாக குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருக்கிறது. இந்த சாலையில் விபத்துக்கள் நடந்து பலர் படு காயமடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த சாலையை செப்பனிட வலியுறுத்தி கடந்த சில வாரங்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் தோட்டத்துபாளையம் பகுதி யில் மரக்கன்றுகள் நடும் போராட்டம் நடத் தப்பட்டது. அதன் பின்னர், அப்போதைக்கு தற்காலி கமாக மண்ணை நிரப்பி நெடுஞ்சாலைத் துறையினரும், மாநகராட்சி நிர்வாகத்தின ரும் சரி செய்து சென்றனர். எனினும் அப் பகுதியில் இருக்கும் குடியிருப்புகளில் கழி வுநீர் வெளியேறிச் செல்ல வடிகால் வசதி இல்லாததால் சாலையில் தேங்கி இந்த சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக மாறுவதுடன் பல விபத்துக்களுக்கும் கார ணமாக உள்ளது.
எனவே இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி இப்பகுதி யைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் பொதுமக்களுடன் வியாழனன்று திருப்பூர் குமரன் சாலையில் உள்ள நெடுஞ் சாலை துறை அலுவலகத்தை முற்றுகை யிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ஆ.சிகாமணி, வடக்கு ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மகாலிங்கம், பானு மதி கிளைச் செயலாளர்கள் மங்கலட்சுமி, தன்ராஜ் உள்பட முப்பதுக்கும் மேற்பட் டோர் இதில் பங்கேற்றனர். உதவிக் கோட்ட பொறியாளர் வரும் வரை போராட்டத்தைத் தொடரப் போவதாக தெரிவித்தனர். எனி னும் நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறி யாளர் மணிகண்டன் இவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். தொடர்ந்து, வெள்ளி யன்று தோட்டத்துப்பாளையம் சாலையில் பணியைத் தொடங்க இருப்பதாகவும், குறிப் பிட்ட காலத்தில் பணி செய்து சாலையை உயர்த்தி சீரமைத்து தருவதாகவும் உறுதி யளித்தார். இதைத் தொடர்ந்து பணிகளை செய்து முடிப்பதற்கு கால அவகாசம் கொடுத்து காத்திருப்புப் போராட்டத்தை நிறுத்தி வைப்பதாகவும், சீரமைப்பு பணி நடைபெறாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் ஆ.சிகாமணி தெரிவித்தார். இந்நிலையில் ஒரு மணி நேரம் நீடித்த காத்திருப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது.