districts

img

பேரூராட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கட்சி முற்றுகை

கோவை, மார்ச் 30- ஆனைமலை தாலுகா விற்குட்பட்ட பழங்குடியின மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் கோட்டூர் பேரூ ராட்சி அலுவலகத்தை முற்று கையிட்டதால் பரபரப்பு ஏற் பட்டது. ஆனைமலை தாலுகா, கோட்டூர் பேரூராட்சிக்கு உட் பட்ட நவமலை ஆற்றுப்படுகையில் பாது காப்பின்றி ஓலை குடிசையில் வாழ்ந்து வரும்  பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பான புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித் தர வேண்டும்.  சின்னார் பழங்குடியின கிராமத்திற்கு புதிய  கான்கிரீட் வீடுகள் கட்டித் தருவதோடு, பொதுக் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தரவும்,  சின்னார்பதியில் நடைபாதைக்கு கல்  பாதைக்கு பதிலாக, கான்கிரீட் சாலை அமைத்து தரவேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகள் வலியுறுத்தி, கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தை  முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.  மார்க்சிஸ்ட் கட்சியின் ஆனைமலை தாலுகா குழு உறுப்பினர் ஆர்.தங்கவேல் தலைமை ஏற்றார்.  இதில், சிபிஎம் ஆனை மலை தாலுகா செயலாளர் வி.எஸ்.பரம சிவம், தாலுகா குழு உறுப்பினர், சி புவனேஸ் வரி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் கோவை மாவட்ட குழு உறுப்பினர், எ. அம்மாசை. விவசாய தொழிலாளர் சங்கத் தின் பொள்ளாச்சி தாலுகா செயலாளர், கே.எ. பட்டீஸ்வர மூர்த்தி, உள்ளிட்ட திரளான பழங்குடியின மக்கள் பங்கேற்றனர்.