districts

img

நியாய விலை கடையில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

உடுமலை, ஜூலை 3- நியாய விலை கடையை முறையாக செயல்படுத்த வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும், கழிப்பிடம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாயன்று கொடிங்கியம் ஊராட்சி வல் லக்குண்டாபுரம் சுப்பயன் நினைவு திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடு மலை முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்  வல்லக்குண்டாபுரம் பரமசிவம் தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஊராக வேலை திட்டத்தில் வேலை அட்டை  வைத்துள்ள அனைவருக்கும் முழுமையாக  வேலை தர வேண்டும். அவர்களுக்கு முழு மையான சம்பளம் வழங்குவதை உறுதிப்ப டுத்த வேண்டும். இப்பகுதி மக்களின் மருத் துவ தேவையை பூர்த்தி செய்யும் வகையில்  எரிசினம்பட்டியில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான மருத்து வர்களை நியமித்து முழுமையான சிகிச்சை  கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.  வல்லக்குண்டாபுரம் மற்றும் கொடிங்கியம்  ஊராட்சி முழுவதும் சுகாதாரத்தை மேம்படுத் தும் வகையில், புதிய சாக்கடைகள் கட்ட  வேண்டும். மேலும், ஊராட்சி பகுதியில் இருக் கும் சாக்கடைகளை சுத்தம் செய்து கொசு  மருந்து அடிக்க வேண்டும். வல்லக்குண்டாபு ரம் கிழக்கு பகுதியில் இருந்து கொடிங்கியம்  செல்லும் சாலையை மக்கள் பயன்படுத்தும்  வகையில் பராமரிக்க வேண்டும். சிங்காரக வுண்டர் தோட்டம் பகுதியில் அடிப்படை வசதி களுடன் பொதுக் கழிப்பிடம் அமைத்து தர  வேண்டும். காளியம்மன் கோவில் அருகில்  இருக்கும் சுடுகாட்டை சுத்தம் செய்து, நுழை வாயிளில் கதவுகள், மின் வசதி மற்றும் தண் ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும். ஊராட்சி பகு தியில் சேகரிக்கும் குப்பைகளை கொட்டி தீ  வைப்பதை தடுக்க வேண்டும். மேலும் அனைத்து பகுதிகளிலும் குப்பைத் தொட்டி கள் வைத்து பொது மக்களின் சுகாதாரம்  காத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடிங்கியம் மற்றும் வல்லக்குண்டாபுரம் நியாய விலை கடைகளில் நடக்கும் முறை கேடுகளை தடுத்து, அனைத்து வேலை நாட்க ளிலும் பொருட்கள் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். விளைநிலங்களில் சுற்றித்  திரியும் மயில்களால் விவசாயிகள் கடும்  பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். எனவே மயில் களை கட்டுப்படுத்த வனத்துறையிடன் ஊராட்சி நிர்வாகம் இணைத்து நடவ டிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பேருந் துகளும் வல்லக்குண்டாபுரம் மேட்டுப் பகுதிக்கு வந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும். உடுமலை மேற்கு ஒன்றியப் பகுதி களில் முறைகேடாக அதிகாலையில் நடை பெறும் மது விற்பனையை தடுக்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட் டது. இதில், கட்சியின் ஒன்றியச் செயலா ளர் கனகராஜ், ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் ராஜகோபால், அருண்பிரகாஷ், ஜெகதீசன், தமிழ்தென்றல் கட்சியின் கிளைச் செயலாளர்கள் வஞ்சிமுத்து ஆறுமுகம் உள்ளிட்ட வல்லாக்குண்டாபுரம் பொது மக்கள் திரளானோர் கலந்து கொண்டார்.