ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி பள்ளிபாளையம் உதவி மின் பொறியாளர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் நகரச் செயலாளர் பெருமாள், மாவட்டக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் முத்துக்குமார், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் லட்சுமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.