சேலம், ஜன.28- சேலத்தில் மனிதநேயத்தை வலியுறுத்தி நடைபெற்ற மினி மாரத் தான் போட்டியில், வெற்றி பெற்ற வர்களுக்கு திரைக்கலைஞர் ரோகிணி, இயக்குநர் கௌதமராஜ் ஆகியோர் பரிசுகளை வழங்கி, பாராட்டு தெரிவித்தனர். தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு சார்பில், மனித நேயத்தை வலியுறுத்தி “மனிதநே யம் காப்போம் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி” சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் அமைப் பின் தலைவர் சேது மாதவன் தலை மையில் நடைபெற்றது. திரைப்பட இயக்குநர் கௌதமராஜ் கொடிய சைத்து துவக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைக் கலைஞர் ரோகிணி வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டு தெரிவித்தார். அத னைத்தொடர்ந்து அவர் செய்தியா ளர்களிடம் பேசுகையில், இந்தியா மனித நேயத்திற்காக குரல் கொடுக் கும் முக்கிய நாடாக உள்ளது. மனித நேயம் காப்பதே மக்கள் அமைதி யாக வாழ வழிவகுக்கும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாற் றத்தை நோக்கி தனது பிரச்சாரம் இருக்கும். தமிழ்நாட்டிற்கு அடிக் கடி பிரதமர் வருகை தருகிறார். அப்படியாவது தமிழக மக்கள் அவரை ஏற்பார்கள் என நினைத் துக் கொண்டிருக்கிறார். மாற்றத் திற்கான வேலையை தென்னிந்தி யாவிலிருந்து தொடர்ந்து நாம் செய்து கொண்டிருக்கிறோம். பெற் றோர்கள் தங்களின் குழந்தைக ளுக்கு முதலில் தாய் மொழியை கற் றுத்தர வேண்டும். மாநில உரிமை கள் பாதுகாக்க வேண்டும். அதற் கான பணிகளை தொடர்ந்து தமி ழக அரசு செய்து வருகிறது, என் றார். இந்நிகழ்ச்சியில் புனித ஜோசப் மருத்துவமனை இயக்குநர் ஜெ. விமல் தாஸ், தமிழ்நாடு கேரம் அசோ சியேசன் தலைவர் நாசர் கான், தமு முக பொதுச்செயலாளர் ஜெ. ஹாஜா கனி, மக்கள் ஒற்றுமை மேடை மாநில ஒருங்கிணைப்பாளர் கே.உதயகுமார், சிபிஎம் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா மற்றும் மினி மாரத்தான் போட்டியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாண விகள் பங்கேற்றனர்.