சேலம், டிச.11- காதல் திருமணம் செய்து கொண்டவர்கள், தங்களது உயி ருக்கு பாதுகாப்பு வழங்க வேண் டும் என வலியுறுத்தி சேலம் மாந கர காவல் ஆணையர் அலுவல கத்தில் மனு அளித்தனர். சேலம் மாவட்டம், நெத்தி மேடு பகுதியைச் சேர்ந்த மோகன் - அம்பிகா தம்பதியின் மகன் பிரதாப். இவர் ஜேசிபி சர்வீஸ் இன்ஜினியராக பணி யாற்றி வருகிறார். தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த ஜிட்டான்டஹள்ளி பகுதியைச் சேர்ந்த சிவம் - கவிதா தம்பதியின் மகள் கிருத்திகா. ஒரு திருமண நிகழ்வின்போது சந்தித்து கொண்ட கிருத்திகா மற்றும் பிரதாப் ஆகிய இருவ ரும் நண்பர்களாக பழகி வந்தனர். இது நாளடைவில் காதலாக மாறியது. இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவே கடும் எதிர்ப்பு தெரிவித்து, கிருத்திகாவிற்கு வேறு ஒரு திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதனை யறிந்த பிரதாப் மற்றும் கிருத்திகா கடந்த டிச.9 ஆம் தேதி யன்று வீட்டை விட்டு வெளியேறி, சேலம் மாவட்டம், ஓலைப் பட்டி பகுதியிலுள்ள பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமண விவரத்தை அறிந்த பெண் வீட்டார், இவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படு கிறது. இந்நிலையில், திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, தங்களது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலு வலகத்தில் மனு அளித்தனர்.