districts

img

மருத்துவ கழிவுகள் கொட்டிய லாரி சிறை பிடிப்பு

தருமபுரி, ஜூலை 1- தருமபுரி அருகே விளை நிலத்தில் மருத்துவ கழிவுகள்  கொட்டிய டிப்பர் லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள  மருத்துவ கழிவுகளை நான்கு டிப்பர் லாரிகளில் ஏற்றிக் கொண்டு வெள்ளியன்று இரவு தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி அடுத்துள்ள கெங்களாபுரம் பகுதியில் உள்ள விளை  நிலங்களில் கொட்டியுள்ளனர். அப்போது கடுமையாக துர் நாற்றம் வீசியதால் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதை யறிந்து அதிர்ச்சியடைந்தனர்.  உடனடியாக கிராம மக்கள் ஒன்று திரண்டு மருத்துவ கழிவு களை கொட்டிய டிப்பர் லாரிகளை சிறை பிடித்தனர். இப் பகுதி அருகிலேயே ஏரிகள், நீரோடைகள் மற்றும் கால்நடை களின் மேச்சல் புறம்போக்கு நிலங்களும், விவசாய கிணறு கள் உள்ளன. இந்நிலையில், மருத்துவக் கழிவுகளை விளை நிலத்தில் கொட்டினால் தண்ணீர் நச்சுத்தன்மை ஏற்படுவ தோடு, கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால்,  சுகாதார மற்ற சூழ்நிலை உருவாகும் என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு தொப்பூர் காவல் துறை யினர் நேரில் வந்து கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என வாகன உரிமையாளரிடம் தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவ கழிவுகளை அளிக் காமல் ஜேசிபி இயந்திரம் மூலம் மீண்டும் கழிவுகளை டிப்பர்  வாகனங்களில் ஏற்றி மற்றொரு இடத்தில் கொண்டு சென்று  கொட்டுவதற்காக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.  தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ கழிவுகளை முறையாக பயோமெட்ரிக் முறையில்  அப்புறப்படுத்தாமல், விளை நிலங்களில் கொட்டினால் விவ சாய நிலங்கள் மற்றும் நீர் நிலைகளை நஞ்சாக்கும்,  மாவட்ட  நிர்வாகம் மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவ டிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை  விடுத்தனர்.