கோவை, பிப்.3- விசைத்தறி உரிமையாளர்களின் 25 ஆவது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்ததால், தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட விசைத்தறியாளர் கள் முடிவு செய்துள்ளனர். திருப்பூர், கோவை மாவட்டங்களில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக விசைத் தறி தொழில் முக்கிய வாழ்வாதாரமாக உள் ளது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் உள்ளனர். இவர்களிடம் 3 லட்சம் விசைத்தறிகள் உள்ளன.நேரடியாக வும், மறைமுகமாகவும் 2 லட்சம் தொழிலா ளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பாவு, நூல் வாங்கி அதனை காடா துணியாக உற்பத்தி செய்து கொடுப்பது இவர்கள் வேலை. அதற்கான கூலி நிர்ணயம் செய்து அதன் அடிப்படை யில் கூலி வழங்கப்பட்டு வருகின்றது.
கடந்த 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு 7 ஆண்டுகளாக விசைத்தறிகளுக்கான கூலி உயர்வு முழுமையாகக் கிடைக்கவே யில்லை. வெகுவாக உயர்ந்துவிட்ட விலை வாசியால் இத்தொழிலை கைவிட்டு விட்டு பலர் வேறு வேலைகளைத் தேடி யும், இத்தொழிலுக்காக வாங்கிய கடனைச் செலுத்த வழியின்றி மூதாதையர்களின் வைத்த சொத்துக்களை இழந்து வாடி யும் விசைத்தறியாளர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து புதிய கூலி உயர்வுக்கான கோரிக்கை வைத்து ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. அதன் பிறகு 24.11.2021 ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் மாநில அமைச் சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் தொழிலா ளர் நலத்துறை அதிகாரிகளாலும் அறிவிக் கப்பட்ட பல்லடம் இரகத்திற்கு 20 சதவிகிதத் திற்கும், சோமனூர் இரகத்திற்கு 23 சத விகிதத்திற்கும் கூலி உயர்த்தப்பட்டது.
ஆனால் அதை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வரும் ஜவுளி உற்பத்தி யாளர்களின் மெத்தனப் போக்கைக் கண் டித்து கடந்த 9 ஆம் தேதி முதல் காலவரை யற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரி மையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து வேலை நிறுத்தப் போராட் டத்தை முடிவுக்கு கொண்டு வர ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும், விசைத்தறி உரி மையாளர்களுக்கும் இடையே தொழிலா ளர் நலத்துறை கூடுதல் ஆணையர் அலுவ லகத்தில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடை பெற்று தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், கோவை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் உயர் அதிகாரி கள் முன்னிலையில் 25 ஆவது கட்ட பேச்சு வார்த்தை புதனன்று நடைபெற்றது.
அப் போது, 10 முதல் 12 சதவிகிதம் மட்டுமே கூலி உயர்வு அளிக்க முடியும் என ஜவுளி துறை யினர் தெரிவித்துள்ளனர். ஆனால், 20 சத விகிதத்துக்கு குறையாமல் கூலி உயர்வு வழங்க வேண்டும் என விசைத்தறி உரிமை யாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால், இந்த முறையும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மேலும், கேட்ட கூலி உயர்வை வழங்க வில்லையெனில் விசைத்தறிகளை இயக்க மாட்டோம் எனவும், தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும், விசைத் தறி உரிமையாளர் சங்க தலைவர் பழனிச் சாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விசைத்தறி உரிமையாளர்கள் கூட்டுக்குழு கூட்டம் நடத்தி, அடுத்த கட்ட முடிவுகள் குறித்து விவாதிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.