districts

img

மணல் குவியலை அகற்றிய காவலர்

கோவை, டிச.14- கோவையில் சாலை யில் குவிந்து கிடந்த மணல்  குவியல்களை போக்குவ ரத்து காவலர் ஒருவர் தானே  அகற்றிய செயல் அனைவ ரது பாராட்டுகளையும் பெற் றுள்ளது. கோவை மாநகராட்சி யில் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கும் அதிகமான சாலை கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் பல சாலை கள் பாதாள சாக்கடைத் திட்டத்திற்காக தோண்டப்பட்டு, சில  இடங்களில் தற்காலிகமாக மண் கொண்டு மூடப்பட்டுள்ளன. இதனால், சாலைகளின் ஓரங்களிலும், சென்டர் மீடியன் கற்க ளுக்கு அருகிலும் மண் குவியல்கள் அதிகம் தேங்கி வரு கிறது. மண்ணில் சருக்கி அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்சனையில் மாநகராட்சி முனைப்பு காட்டி விரைந்து சாலைகளை சுத்தப்படுத்த வேண் டும் என்று கோவை மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  இதனிடையே கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில், சாலை யில் குவிந்து கிடந்த மணல் குவியலால் அவ்வழியாக செல் லும் வாகன ஓட்டிகள் மணலில் சறுக்கிவிழும் நிலை இருந் தது. இதனைப் பார்த்த, போக்குவரத்து காவலர் ஒருவர், தானே  அந்த மணல் குவியல்களை அகற்றி உள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. மாநக ராட்சி செய்ய வேண்டிய வேலையை காவலரே செய்துள் ளதை, பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.