அரசு மருத்துவர்கள் சங்கம் குற்றச்சாட்டு
சென்னை, அக். 30- தமிழக அரசு தவறான செய்தியை பரப்புவதாக அரசு மருத்துவர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. தமிழ்நாட்டில் பொது சுகாதார இயக்ககம், மருத்துவ மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்ககம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த இரு பிரிவிலும் சேர்த்து சுமார் 11 ஆயிரம் மருத்துவர்கள் பணியாற்று கின்றனர். மருத்துவக் கல்வித் துறை யில் (டிஎம்இ) சுமார் 7000 மருத்துவர் கள் பணியாற்றுகின்றனர். ஒட்டு மொத்தமாக மாநிலத்தில் 18 ஆயிரம் மருத்துவர்கள் அரசுப் பணியில் உள்ளனர்.
2009ஆம் ஆண்டில் தமிழக அரசு, மாநில அரசு மருத்துவர்களின் பதவி உயர்வு, ஊதியம் தொடர்பாக அர சாணை ஒன்றை வெளியிட்டது. ஊதி யம் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மறுசீரமைப்பு செய்யப்படும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், அவ்வாறு ஏதும் நடக்காத நிலையில், 2017ஆம் ஆண்டில் அரசு மருத்துவர்கள் இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதற்குப் பிறகு, மூன்று இயக்குனர்களைக் கொண்ட கமிட்டி ஒன்று நியமனம் செய்யப் பட்டது. அந்தக் கமிட்டி மருத்துவர்க ளின் கோரிக்கைகள் நியாயமானவை என்று பரிந்துரைத்தது.அதன் பின்ன ரும் நடவடிக்கை எடுக்காத கார ணத்தால் 2018 டிசம்பரில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொட ரப்பட்டது. மருத்துவர்களின் கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டு மென நீதிமன்றமும் கூறியது. ஆனால் ஏதும் நடக்காத நிலை யில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி மருத்துவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் ஆறு வாரம் அவகாசம் அளிக்கும்படி கேட்டார்.அந்த அவகாசம் அக்டோபர் 9ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அக்டோபர் 25ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை மருத்துவர்கள் துவங்கினர். போராட்டம் துவங்கிய தினத்தன்று மாநில சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ் போராடும் மருத்துவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் அந்தப் பேச்சு வார்த்தையில் எந்த வாக்குறுதியும் அளிக்கப்படாத நிலையில், மருத்து வர்கள் கடந்த 6 நாட்களாக போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதன்கிழமை (அக். 30) கொட்டும் மழையிலும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்து வர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். உண்ணாநிலையில் ஈடுபட்ட 5 மருத்துவர்களில் 3 பேர் மயக்கம் அடைந்ததால், அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். தொடர்ந்து உண்ணா நிலையில் ஈடுபட்டு வரும் பெருமாள் பிள்ளை, முகிப் அலி ஆகியோருடன் மருத்துவர்கள் நளினி, பாண்டித்துரை ஆகிய இருவரும் இணைந்துள்ளனர். இதுகுறித்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
90 விழுக்காடு மருத்துவர்கள் பணி யில் இருப்பதாக அரசு தவறான செய்தியை பரப்புகிறது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளி யிட்டுள்ள அறிக்கை உண்மைக்கு புறம்பானது. சுகாதாரத்துறை ஏற்க னவே எங்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. மத்திய அரசு 13 ஆண்டு பணி யாற்றிய மருத்துவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் வழங்குகி றது. ஆனால் மாநில அரசு 20 ஆண்டு பணியாற்றிய பிறகுதான் ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் வழங்குகிறது. எனவே மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மற்றும் படிகளை ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி அரசு மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அமைச்சர் இப்போது தவறு எனக் கூறுவது என்ன நியாயம். அப்போது 6 வாரகாலம் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து அப்போது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினோம். உரிய ஊதி யம் அளித்தால் நாங்கள் ஏன் தனியார் வேலைக்கு செல்லப் போகிறோம். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அரசு மருத்துவர்களா? இல்லையா? என்பதை அரசுதான் சொல்ல வேண்டும். முதல்வர் எங்கள் பிரச்ச னையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும். போராட்டத்திற்கு தொடர் பில்லாதவர்களுடன் அரசு பேச்சு நடத்துகிறது. அரசு அடக்குமுறையை ஏவுவதை விடுத்து பேச்சு நடத்தி சுமூக தீர்வு காண முன்வர வேண் டும். எங்கள் நியாயமான கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.