திருப்பூர், பிப்.2- பெருமாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்குக்காண அடிக் கல் நாட்டு விழாவைக் காணொளி காட்சி மூலமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதனன்று துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்,குழந்தை நேய பள்ளி அமைப்பு மேம் பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 25 லட்சத்து 66 மதிப் பில் புதிய நான்கு வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு அடிக் கல் நாட்டு விழா நடைபெற்றது. இதைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக துவக்கி வைத்தார். இவ்விழாவில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர் செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் அமுதா, வட்டார கல்வி அலுவலர் முஸ்ரத் பேகம், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தாமணி வேலுச் சாமி, தலைமை ஆசிரியர் விஜய சித்ரா, மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.