நாமக்கல், நவ.29- வையப்பமலை அருகே சேதமடைந்த வீட்டை உடனடியாக சீரமைத்துத்தர வேண்டும், என முதியவரின் குடும்பத் தினர் வலியுறுத்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டம், மல்லசமுத் திரம் ஒன்றியம், நாகர்பாளையம் ஊராட்சி, எருக்கலங்காடு புதூரைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளியான பெருமாள் (85). இவரது மனைவி ராமாயி (80). அவரது பேரன் அருள் (25) மாற்றுத்திறனாளி. இவர்கள் தங்கி யுள்ள வீட்டின் பழுதடைந்து காணப் பட்டது. இதனிடையே, அரசு சார்பில் பழுதடைந்த வீடுகளுக்கு பராமரிப்புப் பணிகள் செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் பெருமா ளின் வீடும் சேர்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இவரின் வீட்டிற்கான பரா மரிப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப் பட்ட, 20 நாட்களுக்கு பின்னர், அவ ரின் வீட்டின் காங்கிரீட் மேற்கூரை இடிக் கப்பட்டது. ஆனால், தற்போது வரை பணிகள் நிறைவு பெறாமலும், மேற் கூரையை சரி செய்யாமலும் அப்ப டியே பணிகள் கிடப்பில் போடப்பட்டுள் ளது. இதனால், மாற்றுத்திறனாளியான பேரனுடன் அப்பகுதியிலுள்ள ஆல மரத்தின் அடியில் வசித்து வருகின்ற னர். தற்போது மழை மற்றும் பனி காலம் துவங்கியுள்ளதால், கடந்த 20 நாட்க ளுக்கு மேலாக வயதான முதியோர் கள் மாற்றுத்திறனாளி பேரனுடன் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட துணைச்செயலாளர் பழனியம்மாள் கூறு கையில், வயதானவர்கள், மாற்றுத்திற னாளிகளை இதுபோன்ற நிலைக்கு தள்ளாமல், அவர்களை பாதுகாக்க வேண்டிய கடமை என்பது அரசுக்கு உள்ளது. எனவே, மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் அரசு சார் பில் ஒதுக்கப்பட்டு இருக்கின்ற நிதி யினை முறையாக பயன்படுத்தி, உடன டியாக முதியவர் பெருமாளின் வீட்டை சீரமைத்துத்தர வேண்டும், என்றார்.