districts

img

வீட்டை தரைமட்டமாக்கியதால் குடும்பத்தினர் சோகம்

சேலம், ஏப்.7- போலியான பத்திரத்தை தயா ரித்து தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரின் வீட்டை இடித்து தரை மட்டமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சேலம் மாவட்டம், சின்னப் பம்பட்டியை அடுத்த முனியம்பட்டி பகுதியில் செந்தில்குமார் என் பவர்  மூன்று தலைமுறையாக தங்க ளுக்கு சொந்தமாக  உள்ள 8 சென்ட்  இடத்தில் வீடு கட்டி வாழ்ந்து வந் துள்ளார். இந்நிலையில், கடந்த சில வரு டங்களுக்கு முன்பு சின்னப்பம் பட்டி பகுதியைச் சேர்ந்த தர்ம லிங்கம் என்ற நபர் போலியான ஆவணம் தயாரித்து, இவரது நிலத்தை அபகரித்துக் கொண்ட தாக கூறப்படுகிறது. மேலும், போலியான ஆவணம்  தயாரித்தது குறித்து, நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில், செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தார் அனைவரும் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு வந்த தர்மலிங்கம் மற்றும் அவரது ஆத ரவாளர்கள் வீட்டை இடித்து தரை மட்டமாக்கியுள்ளனர். இந்த வீடியோ  தற்பொழுது சமூக வலைத்தளங் களில் வைரலாகி வருகிறது.  செந்தில் குமார் வந்து பார்த்த பொழுது வீடு முழுவதும் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக, செந்தில் குமார் ஊடகத்தினரிடையே கூறுகையில், நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவன் என்ப தால் ஆதிக்க சாதியை சேர்ந்த  தர்மலிங்கம் என்பவர், என் மீதும்  குடும்பத்தின் மீதும் அவ்வப்போது  தாக்குதல் நடத்தி வந்தார். மேலும், போலியான ஆவணம் தயாரித்து இந்த நிலத்தை அபகரித்து மிரட்டி  வருகிறார். எனவே, தமிழ்நாடு அரசு எங்கள் குடும்பத்திற்கு உரிய  பாதுகாப்பை வழங்கி நாங்கள் வாழ  வழிவகை செய்ய வேண்டும். எங் களின் நிலத்தை மீட்டு தர வேண்டும்,  என்றார்.