districts

img

புத்தகத் திருவிழாவில் 450 மாணவர்களுக்கு பரிசளித்த மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர்

திருப்பூர், பிப்.1 - தமிழ்நாடு அரசு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் ட்ரஸ்ட் இணைந்து நடத்தும் 19 ஆவது திருப்பூர் புத்தகத் திரு விழாவில் கலை இலக்கிய திற னாய்வு போட்டிகளில் வெற்றி பெற்ற 450 மாணவர்களுக்கும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத், மாநகர காவல் ஆணையர்  பிரவீன் குமார் அபினபு ஆகியோர் பரிசளித்து பாராட்டினர். 19 ஆவது திருப்பூர் புத்தகத் திரு விழாவை முன்னிட்டு கடந்த ஜனவரி 8ஆம் தேதியன்று திருப்பூர்  மாவட்டத்தில் 22 பள்ளி மையங் களில் மாணவ, மாணவியருக்கான கலை இலக்கிய திறனாய்வு போட்டிகள் நடத்தப்பட்டன. இப்  போட்டிகளில் 8,000க்கும் மேற்பட்ட  மாணவ, மாணவிகள் ஆர்வமுடன்  கலந்து கொண்டனர்.இதில்,  வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கான பரிசளிப்பு விழா திருப்பூர் புத்தகத் திருவிழா மேடையில் புதனன்று நடை பெற்றது. இதில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு, ஆறு முதல் எட்டாம் வகுப்பு மற்றும் ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு என மூன்று  பிரிவுகளில் முதல் மூன்று இடங் களை பெற்றவர்களுக்கு ரூ.500,  ரூ.300 மற்றும் ரூ.200 என பரிசுத் தொகை, பாராட்டு சான்றிதழ், நினைவு பரிசாக புத்தகம் மற்றும் மரக்கன்று வழங்கப்பட்டது. இவ்விழாவுக்கு திருப்பூர் சார்  ஆட்சியர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் தலைமை ஏற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.திருவளர்ச்செல்வி வரவேற்றார். இந்த விழாவில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ். வினித், திருப்பூர் மாநகர காவல்  ஆணையர் பிரவீன் குமார் அபினபு  ஆகியோர் தேர்வு பெற்ற 450 மாணவ மாணவிகளுக்கும் முழு மையாக இருந்து, நேரடியாக பரிசு  வழங்கினர். பரிசு வழங்கியபோது இவ் விழாவில் பங்கேற்று இருந்த மாணவ, மாணவிகளும் பெற் றோரும் மிகுந்த உற்சாகத்துடன் கரவொலி எழுப்பி பாராட்டினர். பரிசளிப்பு விழாவின் நிறைவாக பின்னல் புக் ட்ரஸ்ட் சார்பில் தௌ. சம்சீர் அகமது நன்றி கூறினார்.