ஈரோடு, அக்.15- கிராம ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக் கும் முடிவைக் கைவிட வேண் டுமென ஈரோடு மாவட்ட ஆட்சி யரிடம், திங்களன்று பொது மக்கள் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், மொடக் குறிச்சி வட்டம், 46 புதூர் கிராம ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்க ளன்று நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர். அதில், 46 புதூர் கிராம ஊராட்சியில் சுமார் 14 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்ற னர். இதில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நூறு நாள் வேலையை நம்பி உள்ளனர். இந்நிலையில், ஊராட்சியை மாநகராட்சியு டன் இணைப்பதால் இவர்களது வேலை பறி போகும். மேலும், வீட்டு வரி, தண்ணீர் வரி உள்ளிட்டவை பல மடங்கு உயரும். பொது மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர். ஒவ்வொரு ஊராட்சியிலும் தலைவருக்கு பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள் ளன. அதன்படி குடிநீர், சாலை, மின்சாரம், போக்குவரத்து வசதி உள்ளிட்ட எண்ணற்ற பிரச்சனைகள் குறித்துத் தீர்மானிக்கவும், முடிவு எடுக்கவும் சுய அதிகாரங்கள் மன்றத் திற்கு உள்ளன. பொதுமக்களால் தேர்ந்தெ டுக்கப்பட்ட உள்ளூர் பிரதிநிதிகள் என்ப தால் மேற்கண்ட பிரச்சனைகள் குறித்து அணுகவும், காலதாமதமின்றி சரியான தீர்வுகள் எடுக்கவும் எளிதாய் இருக்கிறது. ஆனால், மாநகராட்சியுடன் இணைக்கப் பட்டால் சாதாரண பிரச்சனைகளைக் கூட தீர்க்க முடியாது. எனவே, ஊராட்சியை மாநக ராட்சியுடன் இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டுமென என அதில் தெரிவித்துள்ளனர். முன்னதாக, ஆட்சியரிடம் மனு அளிக்க ஏராள மான பெண்கள் வந்திருந்தனர்.