districts

ஆட்சியர் விடுவித்த ஊழல் அதிகாரி மீண்டும் அதே பணியில் நியமனம்

திருப்பூர், மே 27 – பல்வேறு முறைகேடுகள் காரண மாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத்தால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட கனிமவளத்துறை  உதவி இயக்குநர் வள்ளல் என்ப வரை அதே பணியிடத்தில் அமர்த்தி  மாநில கனிம வளத்துறை ஆணை யர் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் கனிம  வளத்துறை உதவி இயக்குநராக கே. எல்.கே.வள்ளல் என்பவர் பணி யாற்றி வந்தார். இவர், கல்குவாரி தொடர்பான விவசாயிகள் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக் காத காரணத்தினாலும், மாவட்ட ஆட் சியரின் நேரடி ஆய்வுக்கு பிறகும் மாதாந்திர கூட்டம் மற்றும் விவசாயி கள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித் தார். மேலும், அமைச்சர் பங்கேற்ற  ஆய்வுக்கூட்டத்திலும் பங்கேற்க வில்லை என அவரது முறைகேடு களைப் பட்டியலிட்டு, அவரை பணி யில் இருந்து விடுவித்து திருப்பூர்  மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் கடந்த மே 17 ஆம் தேதி, பணி மாற்றம் செய் யப்பட்ட நாளில், உத்தரவு பிறப்பித் தார். ஆட்சியர் எஸ்.வினீத்தின் இந்த உத்தரவு இம்மாவட்டத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வள்ளல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட உத்தரவு நகல் சமூக வலைதளங் களில் பெருமளவு பரவியது. விவசா யிகள் இனிப்பு வழங்கி இதைக் கொண்டாடினர்.  இந்நிலையில், கனிமவளத்துறை  ஆணையர் ஜெயகாந்தன் வெள்ளி யன்று வெளியிட்டுள்ள உத்தரவில்,  மாவட்ட ஆட்சியருக்கு கனிமவளத் துறை உதவி இயக்குநரை பணி யில் இருந்து விடுவிக்க அதிகார மில்லை. ஆட்சியர் பணி மாற்றம் செய் யப்பட்ட நிலையில், கனிமவளத் துறை உதவி இயக்குநரை பணி விடு விப்பு செய்து உத்தரவு பிறப்பித் திருக்கிறார். ஆனால் கனிமவளத் துறை ஆணையர் அல்லது இயக்கு நர் மட்டுமே பணி மாறுதல் தொடர் பான உத்தரவுகளைப் பிறப்பிக்க முடி யும். எனவே வள்ளல் அதே பணியில்  தொடர்வார் என்று குறிப்பிட்டுள் ளார்.

இந்த உத்தரவு விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  திருப்பூர் மாவட்டத்தில் கனிமவளக்  கொள்ளை, கல்குவாரி முறைகேடு கள் பெருமளவு நடைபெற்று வரு கிறது. இதற்கு எதிராக விவசாயிகள்,  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட  பல்வேறு தரப்பினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த பிரச் சனைகளில் வெளிப்படையாகவே முறைகேடுகளுக்கு துணையாக செயல்படக்கூடியவராக வள்ளல் இருக்கிறார். நேர்மையான முறை யில் மாவட்ட ஆட்சியர் அவரை பணி விடுவிப்பு செய்ததை நியாயப்படி  மாநில அரசு உறுதி செய்திருக்க  வேண்டும். ஆனால் கனிமவளத் துறை இயக்குநர், ஆட்சியரின் உத்த ரவை ரத்து செய்து, அதே பணியி டத்தில் வள்ளலை அமர்த்தி இருப் பது ஊழல் அதிகாரிகளின் மேல்மட்ட செல்வாக்கை காட்டுவதாக உள் ளது. இது முறைகேடுகள் செய்வோ ருக்கு ஊக்கம் அளிக்கும் நடவ டிக்கையாகும். ஒருவேளை ஆட்சி யர் உத்தரவு சட்ட விதிமுறைப்படி பொருத்தம் இல்லாவிட்டால், கனிம வளத்துறை இயக்குநரே நேரடியாக  விசாரித்து உரிய நடவடிக்கை எடுத் திருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாமல் அதே பணியிடத்தில் வள்ளலை நியமித்திருப்பதன் மூலம் கனிமவளத்துறை யாருக்கு சாதகமாக இருக்கிறது என்பதை உணர்த்தி உள்ளது. கனிமவளத் துறை ஊழல், முறைகேடுகளுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து  போராடுவோம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.