districts

img

விவசாய வளர்ச்சியில் சிறுதொழில் துறையின் பங்களிப்பு

கோவையின் சிறுதொழில்கள் வளரத் தொடங்கிய காலத்தில் முக்கியமான துறை யாக இருந்தது பம்ப், மோட்டார் உற்பத்தி ஆகும். அதைப்போலவே இங்கு பெரும் தொழிலாக உருவெடுத்த பஞ்சாலையின் மூலப்பொருள் பருத்தி ஆகும். அந்த வகை யில் கோவையை தொழிலும், விவசாய மும் கைகோர்க்கும் இடம் என்றே கூறலாம். அதனைத் தொடர்ந்து வளர்ந்த தொழில் களில், பல சிறுதொழில்கள் விவசாயத்துக்கு பங்களிப்பதாகவே உருவாகின. அவற்றில் சிறுதொழில் துறையின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.  அதுவும் குறிப்பாக இந்திய நாடு விடு தலை பெற்ற பிறகு இந்த விவசாயம் மற்றும் தொழிலை இணைக்கும் வகையில் இரு மாற்றங்கள் இப்பகுதியில் நடைபெற்றன. விடுதலைக்குப் பிறகு பெரும் அணைகள் கட்டப்பட்டு நீர்ப்பாசனத் திட்டங்கள் உரு வாகின. அந்த நீரை வயலுக்கு கொண்டு செல்லும் பம்ப், மோட்டார் தொடங்கி பல்வேறு சிறு இயந்திரங்கள் உற்பத்தி வரை நடைபெற சிறு தொழில்துறை பங்களித் துள்ளது.

ஆனால், இந்த சிறுதொழில்கள் அக்காலத்தில் முறைசாரா தொழில்களாக, அமைப்பு ரீதியாக தங்கள் தேவைகளை எடுத்துரைக்க முடியாத நிலையில் இருந்தன. இந்த நிலையில் தான் 1969ம் ஆண்டு கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்கம்  உருவானது. சிறுதொழில்களின் சிக்கல் களாக அன்று விளங்கிய மின்பற்றாக்குறை, மூலப்பொருள் பற்றாக்குறை தொடங்கி பல வற்றுக்கும் கொடிசியா முன்னெடுத்து தீர்வு களைப் பெற்று தந்தது. அதன் மூலமாக வளர்ச்சி பெற்ற சிறுதொழில்கள், தங்கள் உற்பத்தியை பல துறைகளிலும் செய்து குவிக்கத் தொடங்கின. அதில் விவசாயத் துறைக்கும் கணிசமான பங்களிப்பை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த பங்களிப்பு பலவகையிலும் தனி நிறுவனங்களால் செய்யப்பட்டு வந்தபோதும், கொடிசியா இதன் பின்புலமாக இருந்து வந்தது. கொடிசியாவின் விவசாயத் துறைக்கான நேரடி பங்களிப்பு என்பதை “அக்ரி இன் டெக்ஸ்” கண்காட்சி மூலம் அறியலாம். இப் பகுதி தொழில்முனைவோரின் வளர்ச்சிக் காக தொடங்கப்பட்ட தொழில்கண்காட்சி கள் இன்றளவும் தொழில்முனைவோரின் மேம்பாட்டுக்காக பயன்பட்டு வருகின்றன.

கொடிசியா தொழில்கண்காட்சி என்ற எல் லையை கடந்து, தொழில் வளர்ச்சிக்கான “இன்டெக் கண்காட்சி”, கட்டுமானப் பொருட் கள் தொடர்பான “பில்டு இன்டெக் கண் காட்சி”, மின்சாதனங்கள் தொடர்பான “எலக்ட்ரோடெக் கண்காட்சி”, நுகர்வோருக் கான “கோயம்புத்தூர் ஷாப்பிங் பெஸ்டிவல்” “சப்கான்” எனும் சிறு உற்பத்தியாளர் களுக்கான தொழில் கண்காட்சி, கோவை புத்தகத் திருவிழா போன்றவற்றை கொடி சியா ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இருந்தபோதிலும், கொடிசியாவின் சமூக பங்களிப்பாக விவசாயம் சார்ந்தோரின் நலனுக்காக உருவாக்கப்பட்ட அக்ரி இன் டெக்ஸ் மக்களிடையே மிகவும் பிரபலமான,  பயன் தரக்கூடிய பெருமைமிகு கண்காட்சி ஆகும். நான்கு நாட்கள் நடக்கும் இந்த  அக்ரி இன்டெக்ஸ் எனும் விவசாயக் கண் காட்சி பல லட்சம் விவசாயிகளையும், பொது மக்களையும் கவர்ந்து இழுத்து வருகிறது. அந்தந்த ஆண்டு உருவாக்கப்பட்டு அறி முகமாகும் புதிய பயிர் ரகங்கள், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் விவசாயம் சார்ந்த காட்சிப்பொருட்கள், இந்த கண்காட் சியைப் போல வேறெங்கும் இல்லை என்று  கூறலாம். இந்த கண்காட்சியில் பயிர் ரகங்கள், விவ சாயக் கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்பங் கள், சிறு கருவிகள், வேளாண் இயந்திரங் கள், தோட்டக் கலை சார்ந்த பொருட்கள், நீர்ப்பாசனம் வழங்கும் குழாய்கள் தொடங்கி பம்புகள், சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப்பாசனம் ஆகியவை, கால் நடைத் துறை சார்ந்தவைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

பல லட்சம் விவசாயிகளும், பொதுமக்க ளும் ”எப்போது அக்ரி இன்டெக்ஸ்” கண் காட்சி வரும் என்று காத்திருந்து வருகை புரியும் நிலையை உருவாக்கி இருப்பது கொடிசியாவின் வெற்றி ஆகும். விவசாயம் நமது நாட்டின் முதுகெலும்பு என்ற உண் மையை உணர்ந்து, அதற்கு தனது பங்களிப் பாக இந்த அக்ரி இன்டெக்ஸ் எனும் வேளாண்  கண்காட்சியை தொடர்ந்து 19 ஆண்டுகளாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக இந்த அக்ரி  இன்டெக்ஸ் எனும் விவசாய கண்காட்சி நடை பெறாமல் போனது. இந்த ஆண்டும் ஒமைக் ரான் பரவல் வேகமெடுத்துள்ளது. என்றா லும் இந்த நிலைமாறும், பல தடைகளை வென்றெடுத்துத் தான் கொடிசியாவும், சிறுதொழில்களும் இயங்கி வருகின்றன. மீண்டும் கொடிசியாவின் விவசாயப் பங்களிப் பாக, சிறுதொழில்களின் விவசாயப் பங்க ளிப்பாக அக்ரி இன்டெக்ஸ் எனும் விவசாயக் கண்காட்சி நடக்கும் என்ற நம்பிக்கை இருக் கிறது.

அந்த நம்பிக்கையுடன் முயற்சி செய்வோம், வெற்றி பெறுவோம்!
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்!