districts

img

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தொடர் போராட்டம் வெற்றி

கோவை, நவ.30- சுல்தான்பேட்டை வாரப்பட்டி கிராமத்தில்  வசித்து வரும் தலித் மக்களுக்கு நில அளவை  செய்து பட்டா வழங்க வேண்டும் என  தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற் றும் மார்க்சிஸ்ட் கட்சி முன்னெடுத்த போராட் டத்தின் காரணமாக 21 தலித் அருந்ததிய மக்க ளுக்கு நில அளவு செய்து பட்டா வழங்கப் பட்டது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி யால் வாரப்பட்டி தலித் மக்கள் நெகிழ்ச்சி தெரி வித்துள்ளனர். கோவை மாவட்டம், சூலூர் வட்டம், வாரப் பட்டி கிராமத்தில் 21 தலித் அருந்ததியர் மக்க ளுக்கு வருவாய்த்துறை சார்பில் வீட்டுமனை  ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஆதிக்க சாதியினரின் தலையீட்டால் நீண்ட  காலமாக நிளஅளவை செய்து கொடுக்க வில்லை. இதனையறிந்த தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டது. இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இத னையடுத்து,

 கடந்த 2018 ஆம் ஆண்டு சீனி வாசராவ் நினைவு நாளையொட்டி உடனடி யாக நில அளவை செய்து வாரப்பட்டி தலித்  அருந்ததிய மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செய லாளர் யு.கே.சிவஞானம், மாவட்ட செயலா ளர் வழக்கறிஞர் ஆறுச்சாமி தலைமையில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களை திரட்டி சூலூர் தாலுகா அலுவலகம் முன்பு காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை யடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உடனடியாக நிலத்தினை நில அளவை செய்து பயனாளிகளுக்கு ஒதுக்கப்படும் என அதி காரிகள் உறுதியளித்தனர். ஆனால், நில  அளவை செய்ய வருவாய்த்துறை சென்ற போது சில ஆதிக்க சாதியினர் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியதால் இப்பணி கள் நடைபெறாமல் போனது.

இதனை யடுத்து மீண்டும் தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் தலைவர்கள், அதிகாரிகளை சந் திப்பது, போராடுவது என தொடர்ந்து இயக் கங்களை முன்னெடுத்து வந்தனர்.  இந்நிலையில், செவ்வாயன்று வாரப் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா தர்ம ராஜ் தலைமையில், நிலஅளவை செய்யப் பட்டு, சம்பந்தப்பட்ட பட்டா பயனாளிகளுக்கு தலா 2 சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு நில அளவீடு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட பட்டா பயனாளிகளுக்கு பட்டாவை வழங் கினார்.  தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி வாரப் பட்டி பகுதி தலித் மக்களுக்கு மட்டுமல்லா மல் சூலூர் மற்றும் சுல்தான்பேட்டை பகுதி தலித் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி யுள்ளது.  இதனைத்தொடர்ந்து இக்கோரிக்கை களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த, மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், பெரும் முயற்சி எடுத்த சூலூர் வட்டாட்சியர், ஊராட்சி மன்ற தலைவர் கவிதா தர்மராஜ் மற்றும் அவ ரது கணவர் தர்மராஜ், தீண்டாமை ஒழப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செய லாளர் யு.கே.சிவஞானம் உள்ளிட்டோருக்கு அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர்.  இந்நிகழ்வில் தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மார்க்சிஸ்ட் கட்சியின் சூலூர் தாலுகா செயலாளர் சந்திரன், தாலுகாக்குழு உறுப் பினர்கள் சாரதி, ஜோதிபாசு, ரங்கநாதன் மற் றும் விவசாய சங்கத்தின் தலைவர் திரு மலைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.