districts

img

நான்கு ஆண்டுக்கு முன் மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறப்பு

திருப்பூர், நவ. 2 - திருப்பூரில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டாஸ்மாக் மதுபானக் கடை மூடப் பட்ட பகுதியில் திடீரென மீண்டும் மதுக் கடை திறக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் உடனடியாக எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இத னைத்தொடர்ந்து, மற்ற அரசியல் கட்சிகளும்  கை கோர்த்து மாவட்ட ஆட்சியரிடம் இந்த  கடையை மூட வலியுறுத்தி மனு அளித்தனர்.  இதனால் திறக்கப்பட்ட அன்றே கடையை  மூடுவதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித் தார். திருப்பூர் மாநகராட்சி 22 ஆவது வார் டுக்கு உட்பட்ட டீச்சர்ஸ் காலனி பகுதி மக்கள்  நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாகும். இப்ப குதிக்கு அருகிலேயே ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிலும்  பள்ளிக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.  இப்பகுதியில் கடந்த ஆறேழு ஆண்டுக ளுக்கு முன்பு டாஸ்மாக் மதுபானக் கடை  திறக்கப்பட்டது. இந்த கடை திறக்கப்பட்ட தில் இருந்தே இப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இக்கடையை மூடுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்பட  அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு தரப்பின ரும் சேர்ந்து பல்வேறு கட்டப் போராட்டங் களை மேற்கொண்டனர். இரண்டு ஆண்டுக ளுக்கு மேலாக தொடர் போராட்டம் நடை பெற்ற நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த டாஸ்மாக் மதுபானக் கடை மூடப்பட்டது.  இந்நிலையில், தற்போது மீண்டும் அதே பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை வி யாழக்கிழமை திடீரென திறக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்தவுடன் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் குமரானந்தபுரம் கிளைச் செயலாளர்கள் கே.கணேசன்,  வடக்கு கிளைச் செயலாளர் முத்து, வாலிபர்  சங்க கிளைத் தலைவர் நவீன், கிளைச் செயலாளர் மெய்யப்பன் உள்ளிட்டோர் அந்த  இடத்துக்குச் சென்று கடையை மூட வலியு றுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளி்ட்ட மற்ற அரசியல்  கட்சியினரும் இக்கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்கு திரண்டனர். பல்வேறு அரசியல் கட்சியினரும் அங்கு  திரண்ட நிலையில் காவல் துறையினர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆட்சி யர் உத்தரவு அடிப்படையில் கடை திறக்கப் பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே ஆட்சியரிடம் முறையிடும்படியும் கூறினர். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு மாநகரச் செயலா ளர் பி.ஆர்.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் ராகவன், கொமதேக செல்வகுமார்,

 காங்கிரஸ் சார்பில் நடராஜன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரகத்திற்குச் சென்று மாவட்ட  ஆட்சியர் தா.கிறிஸ்துராஜை நேரில் சந்தித்து  மனு அளித்தனர். ஏற்கெனவே நீண்ட போராட்டம் நடத்தி மூடப்பட்ட டாஸ்மாக் கடையை அதே பகுதி யில் மீண்டும் திறப்பதால் இப்பகுதி மக்களி டம் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பள்ளி கள் அதிகமுள்ள இப்பகுதியில் ஆயிரக்க ணக்கான மாணவர்கள் வந்து செல்லக்கூ டிய பகுதியாகவும் உள்ளது. எனவே மக்க ளின் இயல்பு வாழ்வை சீர்குலைக்கும் வகை யில் இந்த பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடையைத் திறக்கக் கூடாது என்று வற்புறுத்தினர். இந்த கோரிக்கையைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக அந்த  கடையை மூடுவதற்கு உத்தரவு பிறப்பித் தார். அங்கு திறக்கப்பட்ட கடையை மூடி உடனடியாக அது பற்றிய விபரத்தையும் தமக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அதி காரிகளுக்கு உத்தரவிட்டார். மார்க்சிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கத்தினர் முன் கையெடுத்து மற்ற அனைத்து தரப்பி னரையும் இணைத்துக் கொண்டு டாஸ்மாக்  கடைக்கு எதிராக களத்தில் இறங்கியதால், திறக்கப்பட்ட அன்றே மூடப்பட்டது, அப்ப குதி மக்களிடம் வரவேற்பைப் பெற்றது. ஆட்சியர் உத்தரவு அடிப்படையில் இந்த  கடையை நிரந்தரமாக மூட வேண்டும், இங் கிருந்து அகற்ற வேண்டும். மீண்டும் ஏதே னும் ஒரு வகையில் இங்கு கடையைத் திறக்க  முயற்சித்தால் அனைத்துப் பகுதி மக்க ளைத் திரட்டி வலுவான போராட்டத்தை முன் னெடுப்போம் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளர் பி.ஆர்.கணே சன் தெரிவித்தார்.