சேலம், ஏப்.2- எடப்பாடியில் நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத் தைத்தொடர்ந்து, வீடுதோறும் செல்லும் பிரச்சாரத்தை சேலம் தொகுதி வேட்பாளர் செல்வகணபதி தொடங்கி வைத்தார். இந்தியா கூட்டணி சார்பில் சேலம் மக்களவை தொகுதி யில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகண பதி, திமுக இளைஞரணியின் வீடுதோறும் செல்லும் பிரச்சா ரத்தை எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தொடங்கி வைத் தார். முன்னதாக, இளைஞர் அணியினர் மத்தியில் பொதுமக்க ளிடையே திமுகவின் இரண்டரை ஆண்டு கால சாதனை களை எடுத்துரைத்து வாக்கு சேகரிப்பது குறித்து செல்வக ணபதி பேசினார். இந்நிகழ்வில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சீனிவாசன், மாவட்ட அமைப்பாளர் மணிகண் டன், எடப்பாடி சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளர் பரணி, அவைத்தலைவர் தங்கமுத்து, கழக துணைச்செயலாளர் சம் பத்குமார், நகரச் செயலாளர் டி.எஸ்.எம்.பாஷா, துணை அமைப்பாளர்கள் மகேந்திரன், மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.