districts

img

நூல் வெளீயீட்டு விழா

கோவை, மார்ச் 17- கோவையில் இருவேறு இடங்களில் நூல்  வெளியீட்டு விழா நடைபெற்றது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி இலக் கிய வட்டம் 117 ஆவது சந்திப்பு நிகழ்வில்,  கவிஞர் அவை நாயகன் எழுதிய சூரிய  செதில்கள் நூல் வெளியீட்டு விழா நடை பெற்றது. எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் நூலை வெளியிட வழக்கறிஞர் ம.ந.சிவஞாம் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, எழுத்தா ளர் சுப்ரபாரதிமணியன் எழுதிய திரை நாவ லினை, கவிஞர் மகரந்தன் வசந்தகுமார் அறி முகம் செய்து பேசினார். நிகழ்வில் கவிஞர் கள், எழுத்தாளர்கள் என பலர் கலந்து கொண் டனர். இதேபோன்று, கோவை மாவட்ட பாவேந் தர் பாரதிதாசன் இலக்கிய பேரவை சார் பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாநில துணைத்தலைவர் யு.கே.சிவ ஞானம் எழுதிய, இந்தியாவை உலுக் கிய வைக்கம் நூல் அறிமுக விழா போத்த னூர் ரயில்வே தொழிற்சங்க அரங்கில் நடை பெற்றது. நிகழ்வில் பெரியார் கல்பனா பாபு  (எ) பசுலுதீன், தம்பிதுரை, இ.வெ.வீரமணி, அன்பரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங் கம் மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் இலக் கிய பேரவை ஆகிய அமைப்புகள் சார்பில் திர ளானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.