districts

img

பிரிட்டிஷ் அரசு செய்யத் துணியாததை பாஜக அரசு செய்கிறது: ஜி.சுகுமாறன் பேச்சு

திருப்பூர், ஜூலை 26- இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட பிரிட்டிஷ் வெள்ளை ஏகாதிபத்திய அரசு கூட  உணவுப் பொருட்களுக்கு வரி போட வில்லை. ஆனால் பாஜக அரசு அரிசி, எண் ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி போட்டுள்ளது என்று சிஐடியு தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகு மாறன் குற்றம்சாட்டினார். திருப்பூரில் தமிழ் மாநில பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளன மாநில மாநாட்டை செவ்வாயன்று தொடங்கி வைத்து ஜி.சுகுமா றன் பேசினார். அப்போது அவர் கூறியதா வது, நவீனமயத்தில் புதிய உத்தி தற்போது  நாம் பயன்படுத்தி வரும் அலைபேசிகள் 2030  ஆம் ஆண்டு பயனற்றதாக மாறிவிடும், ஆறா வது தலைமுறை அலைபேசிகள், நாம் அணி யும் கண் கண்ணாடியுடன் ஒரு கருவியைப்  பொருத்தி நாம் நினைப்பதை செயல்படுத் தும் நிலை ஏற்பட்டுவிடும் என்று  வல்லுநர்கள் கூறுகின்றனர். அதேபோல் தொழில் துறையி லும் பல மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன.  புதிய கண்டுபிடிப்புகள், இயந்திரங்கள், நவீனம் வந்த பிறகு தொழிலாளர் எண் ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. ஆனால், எல்லா தொழிலிலும் இது போன்ற  நிலை இல்லை. சிமெண்ட் ஆலை, சர்க்கரை  ஆலைகளில் ஆட்கள் எண்ணிக்கை குறைந் திருக்கிறது. ஆனால் பஞ்சாலை தொழிலைப் பொருத்தவரை நவீனங்கள் வந்த பிறகும்  தொழிலாளர் எண்ணிக்கை குறையவில்லை. தமிழகத்தில் 2 லட்சம் தொழிலாளர்கள் பஞ் சாலைகளில் வேலை செய்கின்றனர். ஆனால், இப்போது தொழிலாளர்களை சந் திக்க முடிகிறதா? தொழிலாளர்களைத் திரட்ட  புதிய உத்தியைக் கையாள வேண்டியிருக்கி றது. தொழிற்சங்கத்தின் வளர்ச்சி அதில்தான்  இருக்கிறது. 

கார்ப்பரேட்மய அரசு

இந்தியாவில் அனைத்து பொதுத்துறை  நிறுவன சொத்துகளும் கார்ப்பரேட்டுக ளுக்கு ஒப்படைக்கப்படுகின்றன. துறைமு கங்களை ஒவ்வொன்றாக அவர்களுக்கு கொடுத்து வருகின்றனர். மும்பை துறைமு கத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு கொடுத் தார்கள். அந்த துறைமுகத்தை வாங்க ரிலை யன்ஸ் நிறுவனத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி  ரூ.7115 கோடி கடன் கொடுத்தது. கடைசியில் அந்த கடனை ரிலையன்ஸ் நிறுவனம் இரண்டு ஆண்டுகளாகக் கட்ட முடிய வில்லை என்று சொல்லி, அரசு ரூ.7115 கோடி  கடனை தள்ளுபடி செய்துவிட்டது. மக்கள்  வங்கியில்  சேமித்து வைத்த பணத்தை கார்ப்ப ரேட்டுகளுக்கு கடன் கொடுத்து விட்டு, அதை  அவர்கள் கட்ட முடியவில்லை என்று அரசு தள்ளுபடி செய்கிறது. சாமானியர்கள் கடன்  வாங்கினால் விடுவார்களா?

தகர்க்கப்படும் தொழிலாளர் சட்டங்கள்

நூற்றாண்டு போராடிப் பெற்ற தொழிலா ளர் உரிமை, தொழிற்சங்க சட்டங்களை மாற்றுகிறார்கள். தொழிற் தகராறு சட்டத்தை தொழில் உறவு சட்டம் என மாற்றுகிறார்கள். எந்த முதலாளி உடனாவது தொழிலாளர்கள் சுமூகமான உறவு கொள்ள முடியுமா? அரசு கார்ப்பரேட்டுகள் விருப்பத்துக்கு ஏற்ப சேவை செய்யக்கூடிய இடத்தில் இருக்கிறது.    அரசு காலி பணியிடங்களை நிரப்ப வேண் டும் என இளைஞர்கள் எதிர் காலத்திற்காகப் போராடினால் அரசு ராணுவம் உள்பட அனைத்திலும் ஒப்பந்த முறையை புகுத்துகி றது. இளைஞர்களுக்கு வேலை இல்லை, வருமானம் இல்லை என்றால் அதில் ஒரு  பகுதியினர் சமூக விரோதிகளாக மாறிவிடக் கூடிய நிலை ஏற்படும். அக்னிபாத் திட்டத்தில் இளைஞர்கள் நான்காண்டுகளுக்குப் பிறகு வேலையில்லாமல் வெளியேற்றப்பட்டால் சமூக விரோதிகளாக, ஆர்எஸ்எஸ் அமைப் பின் குண்டர்களாக மாறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

உணவு பொருளுக்கு ஜிஎஸ்டி

பிரிட்டிஷ் அரசு கூட செய்யத் துணியாத காரியத்தை தற்போதைய ஒன்றிய அரசு செய் துள்ளது. அரிசி, பருப்பு, எண்ணெய் என அனைத்து உணவுப் பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி போட்டுள்ளனர். எல்லா தொழி லையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் முயற்சியில் இந்த அரசு செயல்படுகிறது. இதை எதிர்த்து தொழிலாளர்களை அணிதி ரட்ட வேண்டும். நம் பலத்தை அதிகரிக்க வேண்டும். நாடு 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நிலையில் ஆகஸ்ட் 9 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நினைவு கூர்ந்து ஆகஸ்ட் 8ஆம் தேதி இயக்கம் நடத்தவும், ஆகஸ்ட் 15ஆம் தேதி  சுதந்திர தினத்தை அனைத்து தொழிற்சங் கங்களுடன் இணைந்து கொண்டாடவும் சிஐ டியு முடிவு செய்துள்ளது. இவ்வாறு ஜி.சுகு மாறன் கூறினார்.