திருப்பூர், மார்ச் 8- மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு பனியன் தொழில் அமைப்புகளுக்கு மார்ச் 10ஆம் தேதி வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்குவது என்று அனைத்து பனியன் தொழிற்சங் கங்கள் தீர்மானித்துள்ளன. திருப்பூரில் அனைத்து பனியன் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டம் சிஐடியு அலுவலகத்தில் சிஐடியு பனியன் சங்க தலைவர் சி.மூர்த்தி தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியு பனியன் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத், ஏஐடியுசி சங்கச் செயலா ளர் என்.சேகர், துணைத் தலைவர் கே.எம்.இசாக், எல்பிஎப் பனியன் சங்கத் தலைவர் ஜி.பாலசுப்பிர மணியம், பொருளாளர் பூபதி, ஐஎன்டியுசி சங்கச் செயலாளர் அ. சிவசாமி, எச்எம்எஸ் சங்க மாநிலச் செயலாளர் ஆர்.முத்துசாமி, கௌ தம், எம்எல்எப் செயலாளர் மு.சம் பத், எம்எல்எப் பனியன் சங்கச் செய லாளர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29 தேதிகளில் நடைபெறும் வேலைநிறுத்ததை முன்னறிவிப்பு செய்து பனியன் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்குவது என்று முடி வெடுக்கப்பட்டது.
அதன்படி வரும் வியாழனன்று (மார்ச் 10) தியாகி கும ரன் சிலை முன்பிருந்து இருசக்கர வாகனத்தில் சென்று வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக, அனைத்து பனியன் தொழிலாளர்களுக்கும் எட்டு மணி நேர வேலைக்கு குறைந்தபட்ச ஊதி யம் ரூ.21ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும். பனியன் உள்ளிட்ட ஜவுளி தொழில்கள் நூல் விலை உயர்வால் கடும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் பெருமளவு உற்பத்தி பாதித்து வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே ஒன்றிய அரசு உரிய நடவ டிக்கை மேற்கொண்டு நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி பனியன் உள்ளிட்ட ஜவுளி தொழில்களை பாதுகாக்க வேண்டும். ஒன்றிய அரசின் கொள்கை முடிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு தொழில்களை பாதுகாக்க வேண் டும். நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்றுப் பணமாக்கும் ஒன்றிய அரசின் நட வடிக்கைகளை கைவிட வேண்டும். அனைத்து பகுதி மக்களையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி அனைத்து தொழிற்சங்கங் களின் சார்பில் பொது வேலை நிறுத்த முன்னறிவிப்பை தாக்கல் செய்கிறோம். எனவே வருகிற மார்ச் 28, 29 ஆகிய இரு நாட்கள் திங்கள், செவ் வாய் கிழமைகளில் இந்திய நாடு முழுவதும் அனைத்து சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்தம் நடை பெற உள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் திருப்பூர் மாவட்டத் தில் உள்ள அனைத்து பனியன் தொழிலாளர்களும் பங்கேற்பார் கள் என்றும் இக்கூட்டத்தில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.