நாமக்கல், ஆக. 23- பள்ளிபாளையம் அருகே, மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தின் அராஜாகத்தால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் குடும்பத்திற்கு நீதி கேட்டு வெள்ளியன்று மார்க் சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபா ளையம் அடுத்துள்ள ஓடப்பள்ளி பகுதியில் மைக்ரோ பைனான்சில் கடன் பெற்ற சுஜாதா, இந்நிறுவனத் தின் அடாவடியின் காரணமாக தற் கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் சுஜாதாவை தற் கொலைக்கு தூண்டிய குற்றவாளி களை உடனடியாக கைது செய்திட வேண்டும். சுஜாதாவின் குடும்பத் திற்கு ரூ.25 லட்சம் நிவாரண உதவி வழங்கிட வேண்டும். பொது மக்க ளுக்கு தேசியமயமாக்கபட்ட வங்கி கள் மூலமாக குறைந்தபட்ச வட்டி மூலம் தேவையான குழு கடன்களை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளி யன்று மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், பள்ளிபாளையம் காவல் நிலை யத்தை முற்றுகையிட்டு, சுஜாதா தற்கொலை விவகாரத்தில் சம்பந் தப்பட்டுள்ள அனைத்து குற்றவாளி கள் மீதும் வழக்கு பதிவு செய்து நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தினர். இந்த இயக்கத்திற்கு, சிபிஎம் பள்ளிபாளையம் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.ரவி தலைமை தாங் கினார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் படைவீடு பெருமாள், எம். அசோகன், மாவட்டக் குழு உறுப்பினர் கள் இ.கோவிந்தராஜ், கே.மோகன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் முத்துக் குமார், அசன், கே.குமார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.