districts

img

சாலையை விட இரண்டு அடி உயரத்தில் வடிகால் ஒப்பந்ததாரர் கடமைக்கு செய்வதாக குற்றச்சாட்டு

தருமபுரி, டிச.13- சாலையை விட இரண்டு அடி உயரத்தில் மழை நீர்  கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதால் கடந்து செல்ல மாணவர் களும், பொதுமக்களும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், பாகல ஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட பாகல்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இத்தேசிய நெடுஞ்சாலை யில் இருந்து முத்தம்பட்டி வழியாக பொம்மடி செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பாகல்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பெட்ரோலிய நிறுவனம் வரை இச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும்,  சாலையின் இருபுறங்களிலும் மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் சரியான திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு இல்லாமல் மழை நீர் வடிகால் கால் வாய்களை தார்ச்சாலையின் மட்டத்திலிருந்து சுமார் இரண் டடி உயரம் வரை உயர்த்தி கட்டி உள்ளார். பல இடங்களில் மழைநீர் கால்வாயில் சரியான திட்டமிடல் இல்லாததால் மிக வும் அகலம் குறுகியதாகவும் மற்ற கால்வாய்களோடு இணைப்புகள் இல்லாமல் அமைத்துள்ளனர். இதனால்  கால்வாய் பயன்பாட்டிற்கு வரும் பொழுது மழைக்காலங் களில் தண்ணீர் வெளியேற முடியாமல் அப்படியே தேங்கும்  நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால், மக்கள், முதியோர்கள் மற்றும் இப்பகுதி யில் உள்ள நடுநிலை பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவி கள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே மழைநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.