districts

img

விழுப்புரத்தில் 143 பேர் அடைத்து வைக்கப்பட்டு சித்தரவதை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்

திருப்பூர், பிப்.17- விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள  அன்பு ஜோதி என்ற ஆசிரமத்தில் 143  பேர் அடைத்து வைக்கப்பட்டு  சித்திரவதை செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும், இப்பிரச்சினையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார் பில் திருப்பூர், வேலம்பாளையம்,  ஊத்துக்குளி ஆகிய பகுதிகளில் வெள்ளியன்று கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டி வட்டம், குண்டலப்புலியூர் பகுதியில் செயல்பட்டு வந்த அன்பு  ஜோதி என்ற ஆசிரமத்தில் தமிழ்நாடு,  கேரளம், கர்நாடக உள்ளிட்டு பல மாநி லங்களிலிருந்து 143 பேர் அடைத்து வைக்கப்பட்டு சித்தரவதை செய்யப் பட்டுள்ளதும், இளம் பெண்களை போதைப்பொருட்கள் கொடுத்து பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ள தும், பலர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதும் பெரும்  அதிர்ச்சியையும், அதிர்வலைகளை யும் தமிழகம் முழுவதும் ஏற்படுத் தியுள்ளது. இப்பிரச்சினையில் உரிய  நடவடிக்கை எடுக்க கோரி அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின்   சார்பில் வெள்ளியன்று    கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் திருப்பூர் மாநகராட்சி அலுவ லகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு தெற்கு நகர செயலா ளர் பானுமதி தலைமை தாங்கி னார். வடக்கு ஒன்றிய நிர்வாகி கற்பகம், மாவட்ட துணை தலைவர்  மைதிலி, மாவட்ட தலைவர் பவித்ரா  தேவி ஆகியோர் கண்டன உரை யாற்றினர். தெற்கு ஒன்றிய செய லாளர் லட்சுமி நன்றி கூறினார். வேலம்பாளையம் வேலம்பாளையம் அரசு மருத்து வமனை அருகில் நகரத் தலைவர் வி. அழகு தலைமையில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. நகரச் செய லாளர் ர.கவிதா, துணைத் தலைவர்  பி.செல்வி, வி.பி.சுப்பிரமணியம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தி னர். பொருளாளர் சாந்தி, நகரக் குழு  உறுப்பினர்கள், கிளைச் செயலாளர் கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். ஆர். கௌசல்யா நன்றி தெரி வித்தார்.