districts

img

ஒட்டப்பிடாரம் தொகுதி மக்களுக்கு அதிமுக அரசு அடிப்படை தேவைகள் எதுவும் செய்து தரவில்லை

தூத்துக்குடி, ஏப்.28-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுகசார்பில் போட்டியிடும் வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து உதயசூரியன்சின்னத்தில் வாக்கு கேட்டு கனிமொழி எம்.பி ஞாயிறன்று பிரச்சாரம் மேற் கொண்டார்.இதில் கனிமொழி பேசுகையில், தற்போது நடைபெறும் தேர்தல் அதிமுகஆட்சியை மாற்றக்கூடிய தேர்தலாக அமைய வேண்டும். ஒட்டப்பிடாரம் தொகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர், வேலைவாய்ப்பு, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ளன.ஆனால் இதுவரை அதிமுக ஆட்சியில்இங்குள்ள பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை.ஊராட்சி சபை கூட்டத்தில் மக்கள்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் திமுக ஆட்சி அமைந்த உடன் நிறைவேற்றப்படும். தமிழக அதிமுக ஆட்சிமத்திய பாஜக ஆட்சியின் அடிமையாகவே உள்ளது. தமிழகத்தில் உள்ளமக்களின் குறைகளை கேட்க கூட அவர்களுக்கு நேரமில்லை. ஆனால் பிரதமர்,வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றால்,தமிழகத்தில் இருந்து விமானம் மூலம் சென்று ஓபிஎஸ் வாழ்த்தி வருகிறார். குடிக்க தண்ணீர் இல்லாத நிலை இப்போது உள்ளது.குளங்களை தூர் வாராமல் தூர்வாரியதாக கணக்கு எழுதி கொள்கின்றனர். ஆட்சி மாற்றத்திற்கான வாய்ப்பு உங்கள் கையில் உள்ளது.ஒட்டப்பிடாரம் பகுதியில் நீதிமன்றம் அமைக்கப்படும், காங்கேயன் கால்வாய் அமைக்கப்படும், மீனவ கிராமங்களில் தூண்டில் பாலம் அமைக்கப்படும். மக்களுக்கான கோரிக்கைகளை விரைவில், வரும் ஆட்சி மாற்றத்திற்குப் பின் செய்து தருவோம் என பிரச்சாரம் செய்தார்.

;