ஈரோடு, பிப்.13- அனைத்திற்கும் ஜிஎஸ்டி வரி விதித்து, விவசாயத்தையும், தொழிலை யும் அழித்து, சோற்றுக்கும் வரிபோட்ட பாஜகவை ஆதரிக்கும் அதிமுகவை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வைப் புத்தொகையை இழக்க வைத்து புத்தி புகட்ட வேண்டும் என பெ.சண்முகம் உரையாற்றினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பி னர் பி.சண்முகம் வீரப்பன்சத்திரம், அம் பேத்கர் நகர், மணல் மேடு ஆகிய பகுதி களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பு பிரச்சாரங்களில் பெ.சண்முகம் பேசுகையில், பெட் ரோல், டீசல் விலை அன்றாடம் உயர்ந்து கொண்டு இருக்கிறது. ஜிஎஸ்டி முறை யில் வரி போடாத பொருளே இந்தியா வில் இல்லை. மக்களிடமிருந்து எவ்வ ளவு சுரண்ட முடியுமோ அவ்வளவை யும் சுரண்டுகிற வேலையை ஒன்றிய பாஜக செய்கிறது. வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதர்க் கெல்லாம் என்றான் மகாகவி பாரதி. ஆனால் பாஜக அரசு திங்கிற சோத் துக்கும் வரி போடுகிற கொடூரமான அர சாக உள்ளது.
அதனோடு கூட்டு சேர்ந்து அதிமுக மக்கள் நலனுக்காக செயல் படுவோம் என்று கொஞ்சமும் வெட்க மில்லாமல் வாக்கு கேட்கிறார்கள். எரி வாயு விலை இவ்வளவு உயர்த்தியி ருக்கிறார்களே, அதற்கு எடப்பாடியார் என்ன பதில் சொல்ல போகிறார். ஒன் றிய அரசு மின்சார திருத்த மசோதா தாக் கல் செய்துள்ளது. எந்த நேரத்திலும் அது சட்டமாகலாம். அது சட்டமானால் குடிசைகளுக்கு இலவச மின்சாரம், எல்லா வீடுகளுக்கும் இலவச மின்சா ரம், விவசாயத்திற்கு இலவச மின்சாரம், விசைத்தறிக்கு 750 யூனிட் வரை இல வச மின்சாரம் வழங்கப்படுவது எல்லாம் இல்லாமல் போய்விடும். அந்த மசோதா வைக் கொண்டு வந்தது பாஜக. அதை ஆதரிப்பது அதிமுக. இவர்களுக்கு நீங் கள் ஆதரவளிக்கப் போகிறீர்களா? மின் சாரத்தை பிடுங்கிக் கொள், இலவச மின்சாரம் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்ல முடியுமா? விவசாயிகள் கொஞ்சம் இன்னும் விவசாயத்தில் இருக் கிறார்கள் என்றால் அதற்கு காரணம் இலவச மின்சாரம் தான். அதன் இணைப் பையும் பிடுங்கி விட்டால், விவசா யத்தை விட்டு வெளியேற வேண்டியது தான்.
அத்தகைய மக்கள் விரோத ஒன் றிய ஆட்சிக்கு கூட்டாளிதான் அதிமுக. ஆகவேதான் அதிமுக, பாஜக கூட்ட ணிக்கு நீங்கள் வாக்களிக்காதீர்கள் என்று மக்களிடம் கேட்கிறோம். சனாதனத்தை, மனுநீதியை ஏற்று செயல்படக்கூடியது ஆர்எஸ்எஸ் அமைப்பு. ஒன்றியத்தை ஆளும் பாஜக, ஆர்எஸ்எஸ்சின் அரசியல மைப்பு, இவர்களுக்கு அளிக்கும் ஒவ் வொரு வாக்கும், சனாதனத்துக்கு அளித்த வாக்காக இருக்கும். ஆகவே தான் பாஜக-அதிமுக கூட்டணி என்பது ஈரோடு கிழக்கு சட்ட பேரவை தொகுதி யில் வைப்பு தொகையே வாங்க வில்லை என்கிற நிலையை ஏற்படுத்த வேண்டும். பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் கை சின்னம் வெற்றி பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு நகர செயலாளர் பி.சுந்தரராஜன் தலைமை யில் நடைபெற்ற இப்பிரச்சார இயக்கத் தில், மாவட்ட செயலாளர் ஆர்.ரகுரா மன், திமுக செல்வராஜ் உள்ளிட்ட கூட் டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் திர ளான பொதுமக்கள் கலந்து கொண்ட னர்.