districts

img

19ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது

திருப்பூர், ஜன. 27 - தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வா கம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும்  19ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா கோலா கலமாகத் தொடங்கியது. திருப்பூர் காங்கேயம் சாலை வேலன்  ஹோட்டல் மைதானத்தில் வெள்ளியன்று  இப்புத்தகத் திருவிழாவை மாநில செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாநில ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல் விழி செல்வராஜ் ஆகியோர் ரிப்பன் வெட்டித்  தொடங்கி வைத்தனர். புத்தகத் திருவிழா கண்காட்சி அரங்கில் முன்னணி புத்தக வெளியீட்டாளர்கள், விற்ப னையாளர்கள் தங்கள் புதிய வெளியீடுகளை  காட்சிப்படுத்தி உள்ளனர். இத்துடன் அரசுத் துறை சார்ந்த மாசு கட்டுப்பாட்டு வாரியம், மக ளிர் திட்டம், வேலைவாய்ப்புத் துறை, காவல்  துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த 24 அரங்குகளும் அமைக்கப்பட்டு அந்தந்த துறை சார்ந்த திட்டங்கள், வளர்ச்சிப் பணி கள் பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தப் பட்டு உள்ளன. இத்திருவிழா நடைபெறும் பிரம்மாண்ட மான வேலன் ஹோட்டல் மைதானத்தில் அனைத்து வசதிகளும் திட்டமிட்ட முறையில்  தாராளமான இட வசதியுடன் செய்யப்பட்டு  இருக்கின்றது. புத்தக திருவிழாவுக்கு வரு வோர் வசதிக்காக நடமாடும் தானியங்கி பணம் வழங்கும் (ஏடிஎம்) வாகனம் அந்த  வளாகத்திலேயே வைக்கப்பட்டு உள்ளது.

அத்துடன் நான்கு சக்கர, இருசக்கர வாகன நிறுத்துமிடம், சிற்றுண்டி அரங்குகள், கழிப் பிட வசதி என பார்வையாளர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. தாரை தப்பட்டை வாத்தியம் இசைக்க, நாட்டுப்புற கலைஞர்களின் நட னம், நாட்டுப்புறப் பாடல்களும் இடம்  பெற்றன. முதல் நாளிலேயே பெண்கள்,  இளைஞர்கள், சிறுவர்கள் உள்பட ஏராள மான பார்வையாளர்கள் கண்காட்சியைக் காண ஆர்வமுடன் திரண்டு வந்திருந்தனர். தொடக்க விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தலைமை ஏற்றார். திருப்பூர் எம்.பி., கே.சுப்பராயன், திருப்பூர் தெற்கு எம்எல்ஏ க.செல்வராஜ், மாநகர மேயர் ந. தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி, திருப்பூர் சார் ஆட்சி யர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், மாவட்ட வரு வாய் அலுவலர் ஜெய்பீம், பின்னல் புக் டிரஸ்ட்  ஆர்.ஈஸ்வரன் உட்பட மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், பின்னல் புக் டிரஸ்ட் நிர் வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிறை வாக மாவட்ட நூலக அலுவலர் வே. மாதேஸ்வரன் நன்றி கூறினார்.