districts

img

எருது விடும் நிகழ்வு

பள்ளிபாளையம், ஜன.18- நாமக்கல் மாவட்டம் அருகில்  உள்ள ஆயில் பட்டி  கிராமத்தில் எருது விடும் நிகழ்வு செவ்வாயன்று நடை பெற்றது.  தமிழர் திருநாளாம்  தைப்பொங்கலை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள ஆயில்பட்டி கிராமத்தில் எருது விடும் நிகழ்வு நடைபெற்றது. இதில்,  சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய  கால்நடைகள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளை பிரதான  வீதிகளில் அழைத்து வந்தனர். இந்த விழாவில் கிராமப்புற பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொது மக்கள் கண்டு ரசித்தனர்.